Author Admin

சோகத்தில் ரிங்கு சிங்: புற்றுநோயால் தந்தை காலமானார் – கிரிக்கெட் உலகம் இரங்கல் | Rinku Singh in mourning: Father passes away due to cancer – Cricket world mourns!

இந்த நிலையில்தான் கிரேட்டர் நொய்டாவில் உள்ள யாதர்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை, இந்த வார தொடக்கத்தில் மோசமடைந்ததை அடுத்து அவர் வென்டிலேட்டர் உதவியுடன் வைக்கப்பட்டிருந்தார். அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலமானார்.ரிங்கு சிங்கின் தந்தையின் மரணத்துக்கு முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங், “எனது இதயப்பூர்வமான எண்ணங்களும் பிரார்த்தனைகளும் ரிங்கு சிங்கின் குடும்பத்தினருடன் இருக்கும்” என இரங்கல் தெரிவித்துள்ளார். நன்றி

SL vs NZ: “ஏன் இவ்வளவு எதிர்மறையான கருத்துக்களைப் பரப்ப வேண்டும்?”- கேப்டன் தசுன் ஷனகா| SL vs NZ: “Why spread so many negative opinions?” – Captain Dasun Shanaka

அரசாங்கத்திடம் அவர் விடுத்த வேண்டுகோள்”ஏன் இவ்வளவு எதிர்மறையான கருத்துக்களைப் பரப்ப வேண்டும்? ஆம், நாங்கள் உலகக்கோப்பையில் தோற்றுவிட்டோம், அதற்கான காரணங்களும் எங்களுக்குத் தெரியும். எல்லோருக்கும் கவலைகள் உண்டு. அதைப்பற்றி பேசி சரி செய்வதை விட, எதிர்மறை எண்ணங்கள்தான் முன்னுக்கு வருகின்றன. நாங்கள் விளையாடிவிட்டுச் சென்றுவிடுவோம், ஆனால் வருங்காலத்தில் வரப்போகும் வீரர்களுக்காக, அவர்களின் மனநலனைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் இந்த (எதிர்மறை விமர்சனங்களை) நிறுத்த முடிந்தால் அது அவர்களுக்கு நல்லது. தசுன் ஷனகாரசிகர்களிடம் மன்னிப்பு”அணி எப்போதும் சிறப்பாக செயல்படவே…

T20 WC: இந்தியா வென்ற பிறகும் சென்னை ரசிகர்கள் கவலை தெரிவிப்பது ஏன்?

காணொளிக் குறிப்பு, இந்தியா வென்ற பிறகும் சென்னை ரசிகர்கள் கவலை தெரிவிப்பது ஏன்?18 நிமிடங்களுக்கு முன்னர்டி20 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இதுவே ஒரு அணி எடுக்கும் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர். அடுத்து விளையாடிய ஜிம்பாப்வே அணி 6 விக்கெட்டுகளை இழந்து 184…

‘ஜிம்பாப்வேவை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்திய அணி!’ – சேப்பாக்கத்தில் என்ன நடந்தது? |India Defeat Zimbabwe at Chepauk to Keep Semi-Final Dreams Alive

டச்சில் இருந்த பேட்டர்கள் அவுட் ஆனதால் இந்திய அணியின் வேகம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி 5 ஓவர்களை திலக் வர்மாவும் ஹர்திக் பாண்ட்யாவும் கையிலெடுத்தனர். கடைசி 5 ஓவர்களில் மட்டும் 85 ரன்களை சேர்த்தது இந்திய அணி. ஹர்திக்கும் திலக்கும் யார்க்கிங் லெந்த் பந்துகளையும் ஷார்ட் பிட்ச் டெலிவரிக்களையும் ஜிம்பாப்வே வேகங்கள் வீசினர். எதுவும் இருவரையும் கட்டுப்படுத்தவில்லை. சிக்சர்கள் சரளமாக பறந்தன. திலக் வர்மா 16 பந்துகளில் 44 ரன்களையும் ஹர்திக் 23 பந்துகளில்…

`அமலாக்கத்துறையின் அவசர மீட்டிங்’ – அமைச்சர்களுக்கு போடும் ஸ்கெட்சா?

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், மத்திய அரசின் அமலாக்கத்துறை தமிழக அரசியல் களத்தைச் சுற்றி கண்காணிப்பை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக அமலாக்கத்துறை நடத்த உள்ள அவசர மீட்டிங், அரசியல் களத்தை உற்றுநோக்க வைத்துள்ளது. அமலாக்கத்துறை, தமிழக அமைச்சர் கே.என்.நேரு மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக காவல்துறைக்குக் கடிதம் எழுதியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவுசெய்யவும், நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கெனவே செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறையின் வழக்கும் நிலுவையில்…

T 20 WC: பிரகாசமான இந்தியாவின் செமி பைனல் வாய்ப்பு; அதிரடி காட்டிய தென்னாப்பிரிக்க அணி!| india-semi-final-hopes-bright-south-africa-dominant-performance

அகமதாபாத்தில் இன்று (பிப். 26) நடைபெற்ற முக்கியமான சூப்பர் 8 போட்டியில், தென்னாப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் அவர்கள் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று, 4 புள்ளிகளுடன் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளனர்.இந்தப் போட்டி இந்தியாவின் செமி ஃபைனல் வாய்ப்பையும் தீர்மானிக்கும் வகையில் இருந்ததால், இந்திய ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாக இது பார்க்கப்பட்டது.டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. வெஸ்ட்…

வளர்ப்பு நாய் நக்கியதால் தொற்று, மாரடைப்பு… இப்படியும் நடக்க வாய்ப்பு உண்டா? | Infection and heart attack just from a pet dog’s lick… Is it really possible for something like this to happen?

Doctor Vikatan: அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த மேரி ட்ரெய்னர் என்ற பெண்ணுக்கு அவர் வீட்டில் வளர்க்கும் நாய் நக்கியதால், தீவிர தொற்றும், பலமுறை மாரடைப்பும் ஏற்பட்டதாக செய்தியில் பார்த்தேன். மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்தபோது, அவரின் கை மற்றும் கால்களில் உள்ள திசுக்கள் ரத்த ஓட்டம் இன்றி அழுகத் தொடங்கியதால், கைகளையும் கால்களையும் அகற்றியதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்படியும் நடக்க வாய்ப்பு இருக்கிறதா… வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகள் நக்கினாலும் தொற்று பரவுமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு…

மாநில ஆளுநர்களை சட்டமன்ற பரிந்துரையின் பேரில் நியமிக்க வேண்டுமா? ஜோசப் குரியன் ஆணையம் சொல்வது என்ன?

பட மூலாதாரம், rajbhavan_tnகட்டுரை தகவல்25 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்இந்தியாவில் மாநில ஆளுநர்களை நியமிக்கும்போது, மாநில சட்டமன்றங்களால் பரிந்துரைக்கப்படும் மூன்று பேரில் ஒருவரையே நியமிக்க வேண்டும் என்கிறது தமிழ்நாடு அரசால் மத்திய – மாநில அரசுகளுக்கு இடையிலான உறவு குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஜோசப் குரியன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம். மேலும், ஆளுநர்களுக்கு ஒரே ஒருமுறை மட்டுமே பதவிக்காலம் வழங்க வேண்டுமென்றும் அந்தக் குழு பரிந்துரைத்திருக்கிறது.மத்திய – மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளைப் பற்றி…

வேலூர்: காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து – கைதுக்கு பயந்து இளைஞன் தற்கொலை | youth commits suicide after attacking girl student who refused to accept love – shocking incident in vellore

வேலூர் அருகேயுள்ள அரியூர் ஜீவா நகரைச் சேர்ந்த 19 வயது இளைஞன் விக்னேஷ். ப்ளஸ் டூ வரை பயன்ற விக்னேஷ் உயர்க்கல்வியைத் தொடராமலும், வேலைக்குச் செல்லாமலும் வீட்டிலேயே இருந்து வந்தாராம். இந்த நிலையில், தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் 19 வயது மாணவியை விக்னேஷ் ஒருதலையாக காதலித்துவந்ததாக தெரிகிறது. தினமும் மாணவி கல்லூரிக்குச் சென்று திரும்பும்போது தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது. நேற்றைய தினமும் வழக்கம்போல் தொரப்பாடி ராம்சேட் நகர் வழியாக கல்லூரிக்குச் சென்றுகொண்டிருந்தார் அந்த மாணவி. அப்போது…