“அன்புமணியை தலைவராக ஏற்க தயாராக இல்லை;வன்னிய மக்களை வைத்து பிழைப்பு.!”- பாமக முன்னாள் எம்எல்ஏ அருள்| pmk ex mla arul about anbumani

Share

“பாமகவினர் அன்புமணியை தலைவராக ஏற்க தயாராக இல்லை. வன்னிய மக்களை வைத்து பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் அன்புமணியை புறக்கணிக்க வேண்டும்”- என்று பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் பேசியிருக்கிறார்.

சேலத்தில் தனது ஆதரவாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

“எப்போதும் எனக்கு ராமதாஸ்தான் கடவுள். நேற்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் ராமதாஸ்தான் எனக்கு கடவுள். 6 முறை வாய்ப்பு தந்து 7ஆம் முறை எம்எல்ஏ ஆக்கியவர் ராமதாஸ்.

எத்தனையோ சோதனையான சூழலில் உயிரை பணயம் வைத்து அன்புமணியை காப்பாற்றினேன். அன்புமணியை கண்டு வன்னியர்கள் ஏமாறக்கூடாது. வன்னிய மக்களை வைத்து பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் அன்புமணியை புறக்கணிக்க வேண்டும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com