இந்திய அரிசி, மசாலா ஏற்றுமதிக்கு ஏன் உலக நாடுகள் தடை?|From Rice to Mangoes: Why the World Is Rejecting India’s Exports
ஏற்றுமதியாகும் பொருள்கள் தடையானாலோ, நிராகரிப்பானாலோ, அதன் செலவுகள் ஏற்றுமதியாளர்களின் தலையில்தான் வந்து விழும். இது அந்தத் துறைக்கே சற்று சறுக்கலை ஏற்படுத்தும். அடுத்ததாக, சர்வதேச சந்தையில், ஒப்பந்தங்களின்போது அடித்துப் பேரம் பேச இந்தியாவால் முடியாது. இது பிற நாடு சொல்வதைக் கேட்டுகொள்ளும் நிலைக்கு உள்ளாக்கும். இந்தியா வளர்ந்து வரும் நாடு. பிற நாடுகளின் நிபந்தனைகளுக்கு உள்ளாகும் போது, அது இந்தியாவிற்கு அவ்வளவு சாதகமாக அமையாது. இந்தப் பிரச்னைகளைத் தடுக்க இந்தியா தன்னைத் தானே தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.…









