இலங்கை முதியோர் இல்ல தீ விபத்து – 12 பேர் பலியான சம்பவத்தில் இதுவரை தெரிந்தது என்ன?
படக்குறிப்பு, முதியோர் இல்லத்தை நடத்தி வந்த லொக்கு ஐயா என அழைக்கப்படும் இசுரு அனுஷ்க என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரசுரிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்இலங்கையின் ஹொரணை – அங்குருவாதோட்டை – படகொட பகுதியிலுள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் சிலர் காணாமல் போயுள்ளதாக பிபிசி சிங்கள சேவையின் செய்தியாளர் தெரிவிக்கின்றார். இசுரு அனுஷ்க என்ற நபரினால் இந்த முதியோர் இல்லம் நடாத்தி செல்லப்பட்டுள்ளதுடன்,…









