Browsing: செய்திகள்

இனி சென்னை டூ பெங்களூருக்கு செல்ல 2 மணி நேரம் போதும்… வருகிறது அசத்தல் திட்டம்!

சென்னை – பெங்களூரு இடையே அதிவேக ரயில்களை இயக்கும் வகையிலான ரயில் பாதையை அமைப்பதற்கான ஆய்வு பணிகள் துவங்கவுள்ள நிலையில், இந்த பாதையில் போக்குவரத்து துவங்கினால், சென்னையிலிருந்து, பெங்களூருக்கு இரண்டு மணி மணி நேரத்தில் பயணிக்கலாம்.சென்னையில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கர்நாடக தலைநகரான பெங்களூரு நகரம். இந்த 2 நகரங்களுக்கு இடையேயான துாரத்தை ரயிலில் கடக்க, தற்போது நான்கரை மணி நேரத்திலிருந்து, ஆறரை மணி நேரம் வரை ஆகிறது. சென்னை – மைசூரு இடையே…

`ஆவினில் சிறார் தொழிலாளர்கள்?!’ – சிறார் போராட்டமும் அமைச்சர் சொல்லும் விளக்கமும் | Is TN Aavin appointing children as workers? What is the truth?

சென்னை அம்பத்தூரில் அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவினில் சிறார்கள் வேலையில் அமர்த்தப்பட்டிருப்பதாகப் புகார் கிளம்பியிருக்கிறது. குறிப்பாக, ஐஸ்க்ரீம் பேக்கேஜில் 30-க்கும் மேற்பட்ட சிறார்கள் ஈடுபடுத்தப்பட்டதாகவும், கடந்த இரண்டு மாதங்களாக அவர்கள் செய்த பணிக்கு ஊதியம் வழங்காததால் போராட்டத்தை நடத்தியதாகத் தகவல் வெளியானது. இது தொடர்பாக விசாரித்தபோது, ’கோடைக்காலத்தில் ஐஸ் விற்பனை அதிகரிக்கும்’ என கணிக்கப்பட்டு அதன் உற்பத்தியை அதிகரிக்க ஆவின் திட்டமிட்டது. இதனால், உற்பத்தியை அதிகரிக்க விடுமுறை நாள்கள் என்பதால் பள்ளிச் சிறார்களைப் பயன்படுத்தியிருப்பதாகத் தெரியவருகிறது. ஆவின்…

அரிசிக்கொம்பன் யானையை அடிக்கடி இடமாற்றம் செய்வது சரியா? என்ன பாதிப்பு ஏற்படும்?

பட மூலாதாரம், HANDOUTபடக்குறிப்பு, ஊருக்குள் வந்த அரிக்கொம்பன்கட்டுரை தகவல்அரிக்கொம்பன் என்ற அரிசிக் கொம்பன் யானையை இடம் விட்டு மாற்றுவது, மயக்க மருந்து செலுத்துவது போன்றவை உடல்நலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துமா, வாழ்வியல் சூழலை பாதிக்கும் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.கேரளாவில் 35 வயதான அரிசிக் கொம்பன் எனும் ஆண் யானை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. இதையடுத்து, இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் வனப்பகுதியில் இருந்து அரிக் கொம்பன் யானையை பெரியார் புலிகள் காப்பகத்தில் உள்ள…

Motivation Story: வீட்டு வேலை செய்யும் பெண் டு பிரபல எழுத்தாளர்! – பேபி ஹால்தார் வென்றது எப்படி? |life story of author Baby Halder

ஒருநாள் பிரபோத் குமார், பேபியை அழைத்தார். “உனக்குப் புத்தகங்கள் பிடிக்குமா?’’ `பிடிக்கும்’ என்பதுபோல் தலையாட்டினார் பேபி.“நான் ஒரு புத்தகம் தர்றேன் படிக்கிறியா?’’ “இந்த வயசுலயா, இவ்வளவு லேட்டாவா… இனிமே நான் வாசிக்கக் கத்துக்கிட்டு என்ன செய்யப்போறேன்?’’ “அப்பிடியில்லை. நாம விரும்புற ஒண்ணைக் கத்துக்கறதுக்கு தாமதம்னோ, வயசுன்னோ ஒண்ணும் இல்லை. நான் ஒரு புத்தகம் குடுக்குறேன். பொறுமையாப் படி.’’ அன்றைக்கு பிரபோத் குமார் பேபிக்குக் கொடுத்த புத்தகத்தின் பெயர் `Amar Meyebela (My Girlhood).’ தஸ்லிமா நஸ்ரினின் சுயசரிதை.…

ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்தும் துணை வேந்தர்கள் மாநாடு தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளாவதன் பின்னணி

பட மூலாதாரம், TN DIPRகட்டுரை தகவல்தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கலந்துகொண்ட மாநாடு நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் உள்ள ராஜ்பவனில் இன்று (05.06.2023) ஒரு நாள் நடைபெற்றது. உயர்கல்வி நிறுவனங்களின் பாடப் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்ப்பது என்கிற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஆளுநரின் முதன்மைச் செயலாளர் ஆனந்த்ராவ் பாடில், பல்கலைக்கழக மானிய குழுவைச் சேர்ந்த நிர்வாகிகள், தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பிற மாநில பல்கலைக்கழகங்களின்…

ஒடிசா விபத்து: `அவன் இறக்கவில்லை' – பிணவறையில் வீசப்பட்ட மகன்… பாசப்போராட்டம் நடத்தி மீட்ட தந்தை!

மேற்கு வங்கம் மாநிலம், கொல்கத்தாவின் ஷாலிமார் ரயில் நிலையத்தில் ஹெலராம் என்பவர் தன்னுடைய மகன் பிஸ்வஜித் மாலிக்கை (24) கொரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்றி அனுப்பியிருக்கிறார். அதன் பிறகு சில மணி நேரத்தில் ரயில் விபத்துக்குள்ளான தகவல் கிடைத்திருக்கிறது. என்ன செய்வதென புரியாமல் தவித்த ஹெலராம், பிஸ்வஜித் மாலிக்கை செல்போனில் தொடண்டபோது பேச முடியாமல் யாரோ பேசுவதைக் கேட்டிருக்கிறார்.ஒடிசா ரயில் விபத்துஅடுத்த நிமிடம் பலாஷ் பண்டிட் என்ற ஆம்புலன்ஸ் டிரைவருடன் ஆம்புலன்ஸை எடுத்துக்கொண்டு, தன்னுடன் அவருடைய மைத்துனர்…

உலக சுற்றுச்சூழல் தினம் – தமிழ்நாடு: அபாய கட்டத்தை நோக்கி உயரும் புவி வெப்பநிலை; தாங்குமா மாநிலம்?

பட மூலாதாரம், Getty Images20 மே 2023புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்அடுத்த சில ஆண்டுகளில் ஏற்கெனவே அதிக வெப்பத்தால் தகித்துக்கொண்டிருக்கும் பூமி, முதல்முறையாக ஒரு முக்கிய வெப்பநிலை வரம்பைக் கடக்கக்கூடும் என்று காலநிலை விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.இப்போதிருந்து 2027ஆம் ஆண்டுக்குள், தற்போது நிலவும் பூமியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்ஷியஸுக்கு மேல் உயர 66% வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.மேலும், வெப்பநிலை வேகமாக அதிகரிக்கும்போது பனிப்பாறைகள் உருகுவதும் வேகமெடுப்பதால், சென்னையின் கடல் மட்டமும் வேகமாக உயரக்கூடிய அபாயம்…

புதுக்கோட்டை: ஆட்சியர் இல்லத்தில் விநாயகர் சிலை சேதம் என்று போராடிய பாஜக – உண்மை என்ன?

பட மூலாதாரம், Twiiter/pdkt_collectorகட்டுரை தகவல்அண்மையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்ற மெர்சி ரம்யா, தனது முகாம் அலுவலகத்தில் இருந்த விநாயகர் சிலையை அங்கிருந்து அகற்றியதாகவும், 60 ஆண்டுகால பழைமையான அந்தச் சிலை சேதமானதாகவும் கூறி பாஜக மற்றும் வலதுசாரி அமைப்புகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் விநாயகர் சிலை உடைந்துவிட்டதாகப் பகிரப்படும் தகவலில் உண்மையில்லை என்றும், தவறான தகவலை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விளக்கம் அளித்துள்ளது.புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில்…

Bihar bridge collapses பீகார்: ஆற்றின் நடுவே கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்தது.

பிகாரின் பாகல்பூரில் கட்டுமான நிலையில் இருந்த அகுவனி-சுல்தான்கஞ்ச் பாலம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது.இரண்டாவது முறையாக இடிந்து விழுந்த இந்த பாலம் பீகார் மாநிலம் பகல்பூரில் இரு மாவட்டங்களை இணைக்கும் வகையில் ஆற்றின் நடுவே கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென்று இடிந்து விழுந்தது. அதன் வீடியோ…. Source link

1 337 338 339 340 341 530