Daily Archives: May 3, 2026

“நான் நல்ல ஃபார்மிலும் தன்னம்பிக்கையுடனுமே இருந்தேன்”- ருதுராஜ் | “I was in good form and full of confidence” – Ruturaj

டி20 கிரிக்கெட்டில் சில நாள்கள் இப்படித்தான் நடக்கும், நீங்கள் ஒரு நல்ல ஷாட் அடிப்பீர்கள், அது நேராக ஃபீல்டர் கைக்கே செல்லும். சில நேரங்களில் அதே ஷாட் சிக்ஸராகவோ பவுண்டரியாகவோ மாறும். நான் மனதளவில் தெளிவாக இருக்கிறேன் இதற்கு என் மனைவி, சக வீரர்கள் மற்றும் நிர்வாகத்திற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் என்னை எப்போதும் பாஸிட்டிவாக வைத்துக்கொள்கிறார்கள். சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்வீரர்கள் அனைவரும் திட்டங்களை சிம்பிளாக வைத்துக் கொள்ள வேண்டும். தவறுகள் நிச்சயம் நடக்கும். ஆனால்…

ஹோர்மூஸ் நீரிணைக்கு மாற்றாக சிரியா முன் வைக்கும் திட்டம் – இந்தியாவுக்கு போட்டியா?

பட மூலாதாரம், Byron Smith/Getty Imagesபடக்குறிப்பு, எரிசக்தி மற்றும் பொருட்களின் போக்குவரத்திற்கான ஒரு மாற்றுப் பாதையாக சிரியாவை மாற்றுவதே தற்போது தனது குறிக்கோள் என்று சிரியா அதிபர் தெரிவித்துள்ளார்13 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்மத்திய கிழக்கில், போரின் பின்விளைவுகளையும் ஹோர்மூஸ் நீரிணை மூடப்படும் அபாயத்தையும் இரான் எதிர்கொண்டுள்ள நிலையில், சிரியா மாற்றுத் திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது.உலகளாவிய எரிசக்தி மற்றும் வர்த்தகப் போக்குவரத்திற்கான மைய வழித்தடமாகத் சிரியா செயல்பட முடியும் என்று அந்நாட்டு அதிபர் அகமது அல்-ஷாரா…

CSK Vs MI: மும்பையை எலிமினேட் செய்த சென்னை! – சேப்பாக்க சம்பவத்தில் என்னென்ன நடந்தன?

நடப்பு சீசனில் மொத்தமே நான்கு வெற்றிகளை சிஎஸ்கே பதிவேற்றியுள்ளது, அதில் இரண்டு மும்பைக்கு எதிராக வந்தது என்பதுதான் கவனிக்கத்தக்கது…”உடைத்த உண்டியலில் கிடைத்தது வரை லாபம்” என மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ஆடினாலே இரு புள்ளிகள் உறுதி என்ற மனப்போக்கோடுதான் பல அணிகளும் அவர்களை எதிர்கொள்கின்றனர். ஏனெனில் மும்பை தனது அவுட்டேடெட் வெர்ஷனோடுதான் இந்த சீசன் முழுவதுமே ஆடிவருகிறது. “மும்பை எக்ஸ்பிரஸா அல்லது மும்பை சர்க்கஸா?” எனுமளவு பிளேயிங் லெவனை இறுதி செய்வது தொடங்கி, கேம் பிளான் வரை…

வேளாங்கண்ணி: சர்ச் முன்பு திரண்ட தொண்டர்கள்; ரத்தான விஜய் வருகை; விமர்சனத்துக்கு உள்ளான தவெக கோஷம்! | Velankanni: Volunteers gather in front of church; Vijay’s visit canceled; Tvk slogan criticized!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை எண்ணப்படுகிறது. எக்ஸிட் போல் கருத்துக் கணிப்பு முடிவுகள் கலவையாக இருந்ததால் யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்கிற குழப்ப நிலை தொடர்வதாகப் பலரும் சொல்கிறார்கள். த.வெ.க இந்தத் தேர்தலில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் எனப் பரவலாகப் பேசப்படுகிறது. த.வெ.க தலைவர் விஜய் நம்பிக்கையோடு தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருக்கிறார். தனக்கும், தன் கட்சி வேட்பாளர்களுக்கும் வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக திருச்செந்தூர் முருகன், சீரடி சாய்பாபா ஆகிய வழிப்பாட்டு தலங்களில் விஜய்…

“இந்தத் தொடர் முழுவதுமே எங்களுக்கு சாதகமாக இல்லை என்று நினைக்கிறேன்” – ஹர்திக் | “I don’t think this series has been favorable for us at all,” said Hardik.

ஐபிஎல் தொடரின் நேற்றைய (மே.2) ஆட்டத்தில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறது. இந்நிலையில் அணியின் தோல்வி குறித்து பேசிய மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, “இந்தப் போட்டி மட்டுமல்ல, இந்தத் தொடர் முழுவதுமே எங்களுக்குச் சாதகமாக இல்லை என்று நினைக்கிறேன். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் அவர்கள் எங்களை விட சிறப்பாகச் செயல்பட்டார்கள். ஒரு கட்டத்தில் நாங்கள் 180 முதல் 190 ரன்கள் வரை எடுப்போம் என…

கோவை சிறுமுகையில் தாயை பிரிந்த குட்டியானையை பிற மந்தைகள் ஏற்காமல் விரட்டுவது ஏன்?

பட மூலாதாரம், TN Forest Departmentபடக்குறிப்பு, கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் கடந்த 2024ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி வனத்துறையால் மீட்கப்பட்ட குட்டி யானை (கோப்புப் படம்)கட்டுரை தகவல்16 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்கோயம்புத்தூரின் சிறுமுகை வனச்சரகத்தில் தாயை விட்டுப் பிரிந்த யானைக் குட்டி ஒன்றை காட்டு யானைக் கூட்டத்துடன் மீண்டும் சேர்ப்பதற்காக வனத்துறை அதிகாரிகள் கடந்த ஒரு வாரமாக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.ஆனால், யானை மந்தையில் அந்தக் குட்டியைச் சேர்க்கும் முயற்சிகளுக்குப்…

`மனக்குமுறல்கள் போராட்டமாக வெடிப்பது இயல்புதான்' – கோவையில் செல்வப்பெருந்தகை பேட்டி

தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பாக 2026 சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கையுடன் தேர்தல் முடிவுகளும் வெளியாகும். இதற்கிடையில், தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளும் வெளியானது. அதில் தி.மு.க கூட்டணி ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்திருக்கின்றன. இந்த நிலையில், இன்று மாலை கோவையில் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “சமீபத்தில் வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தி.மு.க கூட்டணிக்கு 140 முதல் 145…