CSK: "இந்த அணிக்காக விளையாடுவதை பெரும் பாக்கியமாக நினைக்கிறேன்!"- ஆட்ட நாயகன் சஞ்சு சாம்சன்

Share

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல்.23) ஆட்டத்தில் சென்னை அணியும், மும்பை அணியும் மோதின.

இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சனின் அதிரடி சதத்தால், மும்பை அணியை 103 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் ஆட்டநாயகன் விருது வென்ற பிறகு பேசிய சஞ்சு சாம்சன், ” வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சதம் அடித்தது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது.

csk
csk

இது எனக்கும், எனது அணிக்கும் சிறந்த தருணம். ஆடுகளத்தின் தன்மையை மட்டுமே கவனித்து விளையாடுகிறேன். நாங்கள் இடைவிடாமல் விக்கெட்டுகளை இழந்துகொண்டே இருந்தோம்.

எப்போதெல்லாம் அதிரடியாக ஆட நினைத்தோமோ, அப்போதெல்லாம் விக்கெட்டுகளை இழந்தோம். எனவே, நிலைத்து நின்று ஆடும் ஒரு பேட்ஸ்மேன் கடைசி வரை இருப்பது மிகவும் முக்கியம் என்று நினைத்தேன்.

அதை நான் முயற்சித்தேன். ஆட்டமே மைதானத்தில் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லும். நீங்கள் ஒரு முன்முடிவோடு வர வேண்டிய அவசியமில்லை.

எனது அனுபவத்தின்படி, எப்போதும் அணிதான் எனக்கு முதன்மையானது. ‘நான் இப்படித்தான் ஆடுவேன், அவுட் ஆனாலும் கவலை இல்லை’ என்று சொல்லலாம்.

ஆனால், என் மீது வைக்கப்பட்டுள்ள பொறுப்பு மற்றும் அனுபவத்தின் காரணமாக, ஆட்டத்தின் சூழ்நிலையையும் அணியின் தேவையையும் புரிந்துகொண்டு, அதற்கு ஏற்றவாறு எனது ஆட்டத்தை திட்டமிடுவது எனது கடமை.

சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்

இந்த வெற்றியின் மூலம் கிடைத்துள்ள உத்வேகத்துடன் நாங்கள் தொடர்ந்து முன்னேற விரும்புகிறோம். ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது என்பது எங்களுக்குத் தெரியும். ஒவ்வொரு அணியும் மிகுந்த தீவிரத்துடன் விளையாடும்.

எனவே நாம் அதற்குத் தயாராக இருக்க வேண்டும், இந்தத் தருணத்தை ரசித்து விளையாட வேண்டும். நான் முதல்முறையாக மஞ்சள் நிற சீருடை அணிந்துள்ளேன். இது எனக்கு மிகவும் புதிய அனுபவம்.

வான்கடே மைதானத்தில் என் வாழ்நாளில் இவ்வளவு மஞ்சள் நிறத்தை நான் பார்த்ததே இல்லை. இந்த அணிக்காக விளையாடுவதை பெரும் பாக்கியமாக நினைக்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com