Browsing: செய்திகள்

25 முறை மகளை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை; சிறு பிரச்னையில் வெறிச்செயல்!| Man stabs daughter 25 times over domestic dispute in Surat, attack caught on camera

குஜராத் மாநிலம், சூரத்தின் கடோதரா பகுதியைச் சேர்ந்தவர் ராமானுஜர். இவர் தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த 18-ம் தேதி இரவு இவரின் மகளும், மனைவியும் மாடியில் தூங்க விரும்புவதாகத் தெரிவித்திருக்கின்றனர். அதற்கு, ‘முடியாது, வீட்டின் அறையில்தான் தூங்க வேண்டும்’ என அனுமதி மறுத்திருக்கிறார். இந்த விவகாரத்தால் மூன்று பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த ராமானுஜர், வீட்டின் சமயலறையிலிருந்த கத்தியை எடுத்துவந்து மகளைக் குத்தியிருக்கிறார்.இதை எதிர்பார்க்காத மற்ற குடும்பத்தினர் அதைத் தடுக்க…

தோனி கரங்களில் 5-வது முறையாக ஐ.பி.எல். கோப்பை – சி.எஸ்.கே. வெற்றியில் அப்படி என்ன சிறப்பு தெரியுமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்சிஎஸ்கே அணி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. ஆனால் இது மற்றுமொரு மகுடம் என கடந்துவிட முடியாது. அதற்கு காரணம் இருக்கிறது. 2007-ல் டி20 உலகக்கோப்பையை வென்றுவிட்ட தோனிக்கு முதல் ஐபிஎல் கோப்பை என்னவோ மூன்றாவது சீசனில் 2010-ல் தான் கிடைத்தது. அதுவே அதன் முதல் கோப்பை. கொண்டாடித் தீர்த்தது. அடுத்த ஆண்டே மீண்டும் ஐபிஎல் கோப்பையை வென்றது. ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக ஒரு அணி கோப்பையை தக்க வைத்தது…

`பதக்கங்களே எங்கள் ஆன்மா; அவற்றை வீசிய பிறகு…’- கங்கைக் கரையில் கண்ணீர்விட்ட மல்யுத்த வீராங்கனைகள்| Wrestlers’ protest Athletes head back upon farmer leader’s request

இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் நீதிவேண்டி, மே 28-ம் தேதி புதிய நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்ற மல்யுத்த வீராங்கனைகளை போலீஸார் வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று கைதுசெய்தனர். இதன் பரபரப்பு ஓய்வதற்குள்ளேயே, “இன்று மாலை 6 மணிக்கு எங்களின் பதக்கங்களை கங்கையில் வீசப்போகிறோம். பதக்கங்கள்தான் எங்கள் உயிர், ஆன்மா. அவற்றை வீசிய பிறகு எங்கள் வாழ்வில் அர்த்தமில்லை. சாகும்வரை இந்தியா கேட்டில் போராட்டம் நடத்தப்போகிறோம்” என்று…

மல்யுத்த வீரர்களை தடுத்து நிறுத்திய விவசாயிகள் – கங்கைக் கரையில் நடந்த கடைசி நேர உணர்ச்சிமிகு போராட்டம்

பட மூலாதாரம், ANI30 மே 2023, 14:22 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வாழ்நாள் கனவாக ஒலிம்பிக்கில் வென்றெடுத்த பதக்கங்களை மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கங்கை ஆற்றில் வீசியெறியச் சென்ற இடத்தில் உணர்ச்சிமிகு காட்சிகள் அரங்கேறியுள்ளன. கடைசி நேரத்தில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் நேரில் சென்று மல்யுத்த வீரர், வீராங்கனைகளை தடுத்து நிறுத்தியுள்ளனர். கங்கைக் கரையில் பதக்கங்களுடன் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கண்ணீர் விட்டு கதறி அழுததைக் கண்ட பொதுமக்கள் வேதனையடைந்தனர். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரான…

ஷாங்காய்: 100 ஆண்டுகளில் இல்லாத `வெப்பம்’ | வட கொரியாவின் ராணுவ உளவு செயற்கைக்கோள்

கொலம்பியா நாட்டின் அமேசான் பகுதியில், விமான விபத்தின்போது காணாமல்போன நான்கு குழந்தைகளைத் தேடும் பணி ஒருமாத காலமாகத் தொடர்ந்து வருகிறது. அவர்கள் உயிருடன் இருப்பதற்கான சான்றுகள் கிடைத்திருப்பதால், அவர்களைத் தேடும் பணியை தொடர்வதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். Source link

தமிழ்நாடு: சாலை வசதி இல்லாததால் பறிபோன குழந்தையின் உயிர் – மலைகிராமங்களில் ஏன் இந்த நிலை?

பட மூலாதாரம், SOCIAL MEDIAபடக்குறிப்பு, குழந்தையின் உடலை சுமந்து செல்லும் காட்சி26 நிமிடங்களுக்கு முன்னர்அந்த பெற்றோர் இறந்துபோன தங்கள் குழந்தையின் உடலை கைகளில் சுமந்துகொண்டு , மலையேறி தங்களது கிராமத்திற்கு நடந்து செல்லும் காட்சி சமூக ஊடகங்களில் கடந்த ஞாயிறன்று அதிகமாக பகிரப்பட்டு வந்தது. அவர்களின் ஊருக்கு சாலை வசதி இல்லாததால், அந்த குழந்தையின் உடலை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் அவர்களை பாதி வழியிலேயே இறக்கிவிட்டுச் சென்றது, குழந்தையை இழந்து தவித்திருந்த அவர்களை மேலும் உடைந்துபோக செய்தது.…

அடிக்கடி ரீசார்ஜ் கவலையா? இதோ சூப்பரான ஐடியா.. இந்த ஆப்ஷன்களை கவனிங்க..!

மொபைல் யூஸர்களை பொருத்தவரை எப்போதுமே போஸ்ட்பெய்ட் யூசர்களை விட ப்ரீபெய்ட் யூசர்களுக்கு சில கூடுதல் சலுகைகள் இருப்பதை நம்மால் மறுக்க முடியாது. ஏனெனில் புதிதாக பிளான்கள் அறிமுகப்படுத்தப்படும் பட்சத்தில் தாராளமாக அவர்களால் அதன் வேலிடிட்டி, விலை மற்றும் பயன்பாடுகளை பொறுத்து எந்த பிளான் தனக்கு பொருத்தமானது என்பதை யோசித்து அதில் தம்மை இணைத்துக் கொள்ள முடியும்.இந்தியாவின் முக்கிய டெலிகாம் நிறுவனங்களாக இருக்கும் ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா டெலிகாம் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு குறுகிய கால…

திருமணத்தன்று மாயமான மணமகள்; 13 நாள்கள் காத்திருந்த மணமகன்! இறுதியில் நடந்தது என்ன? | Rajasthan groom waits 13 days for missing bride from marriage fix day

ராஜஸ்தானில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட தினத்தில் மணமகள் திடீரென காணாமல்போனதையடுத்து, கட்டினாள் அந்தப் பெண்ணைத்தான் கட்டுவேன் என விடாப்பிடியாக 13 நாள்கள் காத்திருந்த மணமகனுக்கு, இறுதியில் காத்திருப்பின் பலன் கிடைத்துவிட்டது.முன்னதாக ராஜஸ்தானின் சாய்னா கிராமத்தில் இளைஞர் ஒருவருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் மே 3-ம் தேதியன்று திருமணம் நடக்கவிருந்தது.மணமகன் – மணமகள்அதன்படி சரியாக திருமண நாளில் மணமகன் வீட்டார் மணப்பெண்ணின் வீட்டுக்கு வந்தனர். கிட்டத்தட்ட அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்துவிட்டன. இந்த நிலையில், மணமகளும், மணமகனும் மணமேடையில் ஒன்றாகச் சுற்றிவரும் சம்பிரதாயத்துக்கு…

ChatGPT: செயற்கை நுண்ணறிவு போட்டியில் அமெரிக்காவை வெல்லுமா சீனா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்ஜி7 நாடுகளின் உச்சி மாநாடு கடந்த வார இறுதியில் ஜப்பானில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்களில் ஒன்றான செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் தற்போது பேசுபொருளாகி உள்ளது.செயற்கை நுண்ணறிவின் எதிர்மறை தாக்கங்கள் குறித்து வெளிப்படுத்தப்படும் கவலைகள், இந்த நவீன தொழில்நுட்பத்தில் சீனாவின் ஆர்வத்தைத் தடுக்கும் அமெரிக்காவின் முயற்சியாக இருக்குமோ என்று பார்க்க வேண்டியுள்ளது.செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தற்போது அமெரிக்காவின் கை ஓங்கியுள்ளது என்றுதான் சொல்லவேண்டும். அத்துடன் தகவல் தொழில்நுட்ப…

Tamil Live Breaking News | 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

29 May 2023 14:34 (IST)அசாமில் முதல் வந்தே பாரத் ரயில் சேவை : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்அசாம் மாநிலம் கவுகாத்தி – மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை, காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திரமோடி தொடங்கிவைத்தார். Northeast gets its first Vande Bharat Express today. It will boost tourism, enhance connectivity. https://t.co/6DpRIeQUjg — Narendra Modi (@narendramodi) May 29,…

1 340 341 342 343 344 530