“எப்போதெல்லாம் விளையாட வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று நினைப்பேன்’ என உத்வேகமாக பேசிய மும்பை அணியின் இளம் வீரரான அஸ்வனி குமார் குஜராத் அணிக்கு எதிரான நேற்றைய (ஏப்ரல்.20) ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.
பலரின் பாராட்டுகளைப் பெற்று வரும் இந்த அஸ்வனி குமார் யார்?

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அஸ்வனி குமாருக்கு 24 வயது. அவரது தந்தை சாதரண விவசாயி.
கிரிக்கெட் விளையாடத் தேவையான அடிப்படை வசதிகள் கூட இல்லாத சூழலில், கேன்வாஸ் காலணிகளை அணிந்து கொண்டு, ஷேர் ஆட்டோ மற்றும் சைக்கிளில் பல கிலோமீட்டர் பயணம் செய்து கிரிக்கெட் பயிற்சியை பெற்றிருக்கிறார்.