போட்டி நேரத்தில் மட்டும் அனுமதி! மற்ற நேரங்களில் தனி அறை! ஐசிசி-யின் அதிரடி உத்தரவு! | Allowed during competition only! Private room at other times! ICC’s action order!

“தி கார்டியன்’ நாளிதழ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வைபவ் சூர்யவன்ஷி போட்டிகள் நடைபெறும் நேரங்களிலும், அணியின் டீம் மீட்டிங் போதும் மட்டுமே இந்திய அணியின் பிரதான உடைமாற்றும் அறைக்குள் இருக்க அனுமதிக்கப்படுவார். மற்ற நேரங்களில், குறிப்பாகப் போட்டிக்கு முன்பும் பின்பும் ஆடை மற்றும் காலணிகளை மாற்றிக்கொள்ளும் போது, அவர் தனக்கு ஒதுக்கப்பட்ட தனி அறையையே பயன்படுத்த வேண்டும்.இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில், “இது ஐசிசி-யின் விதிகளுக்கு உட்பட்ட தொடர் என்பதால், அவர்களின் குழந்தைகள் பாதுகாப்பு நடைமுறைகள் இங்குப்…

“‘லிங்கம்’ கதாபாத்திரத்திற்கு சாய்ஸ் இல்லாத ஒரே ஆள் கதிர்தான்!” – லக்‌ஷ்மி சரவணக்குமார் |”Kathir is the only choice for the character of ‘Lingam’!” – Lakshmi Saravanakumar

இந்த நிகழ்வில் இயக்குநர் லக்ஷ்மி சரவணக்குமார் பேசுகையில், “இந்த ஐந்தரை வருட நீண்ட பயணம் எனக்கு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த சோர்வையும் எதிர்பார்ப்பையும் கொடுத்தது. சாகித்திய அகாதமி விருது பெற்ற ஒரு எழுத்தாளரான எனக்கு இயக்குநர் வசந்தபாலனிடம் பணியாற்றிய அனுபவமே, இயக்குநராக வேண்டும் என்கிற உந்துதல் அளித்தது. நான் எழுதிய 85 கதைகளில் பல முக்கியக் கதைகள் விகடனில்தான் வந்தன. ‘இரண்டாம் ஆட்டம்’ தொடரின் 40 அல்லது 50-வது எபிசோடின் போது இந்த சீரிஸிற்கான கதவு திறந்தது.…

குணால் ஷா: வாட்ஸ்ஆப் தலைமை பொறுப்புக்கு வந்த இந்தியர் – முழு பின்னணி என்ன?

பட மூலாதாரம், CREDபடக்குறிப்பு, இந்திய ஃபின்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமான கிரெட்டின் (CRED) நிறுவனர் குணால் ஷா வாட்ஸ்ஆப்-இன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்கட்டுரை தகவல்சமீப காலம் வரை குணால் ஷாவின் பெயர் முக்கியமாக இந்தியாவின் ஸ்டார்ட்ஆப் மற்றும் முதலீட்டாளர்கள் உலகுக்குள் மட்டுமே இருந்தது.ஃபின்டெக் நிறுவனமான ‘கிரெட்’-இன் நிறுவனர் ஷா, தனது வணிகத்துக்கு அப்பாலும் வலுவான அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.தனது பாட்காஸ்ட்டில் (ஒலிப்பதிவு) அவர் பெரும்பாலும் நம்பிக்கை, ஊக்கம், சொத்து உருவாக்கம் மற்றும் மனித நடத்தை போன்றவற்றைப் பற்றி பேசுகிறார். சமூக ஊடகங்களில்…

பாமக: `தொண்டர்களுக்கு மனக்கசப்பு இருக்கும்தான்!’ – ராமதாஸ், அன்புமணி சந்திப்பு குறித்து ஜி.கே.மணி

பாட்டாளி மக்கள் கட்சியில் மருத்துவர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையேயான மோதல் ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில், இன்று மதியம் அன்புமணி தன்னுடைய மனைவி சௌமியா மற்றும் மகள்களுடன் தைலாபுரம் தோட்டத்திற்கு வருகை புரிந்தார். அப்போது அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மருத்துவர் ராமதாஸ் அன்புமணியைக் கட்டிப் பிடித்து கண்கலங்கியதும், அதன் பிறகு அன்புமணி உள்ளிட்டவர்கள் ராமதாஸ் மற்றும் அவரது மனைவி காலில் விழுந்து ஆசி வாங்கிய வீடியோக் காட்சிகளும்…

சியா கோயல்: காதலருடன் சேர்ந்து வருங்கால கணவரை கொன்றதாக பெண் கைது – என்ன நடந்தது?

பட மூலாதாரம், UGCபடக்குறிப்பு, புனேயின் மாவல் தாலுகாவில் உள்ள கஹுஞ்சேவைச் சேர்ந்த கேதன் அகர்வாலுக்கு, சில மாதங்களுக்கு முன்பு புனே மார்க்கெட் யார்டு பகுதியைச் சேர்ந்த சியா கோயல் என்ற இளம் பெண்ணுடன் நிச்சயம் செய்யப்பட்டது.பிரசுரிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்தனக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த இளைஞரை மகாராஷ்டிராவின் லோஹாகட் கோட்டையிலிருந்து கீழே தள்ளி கொலை செய்ததாக குற்றச்சாட்டின் பேரில் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது காதலரும் கைது செய்யப்பட்டுள்ளதாக புனே காவல்துறை…

“‘பேட்ட’ படத்திற்குப் பிறகு சிம்ரனுடன் நான் நடிக்கிறேன்!” – ரஜினிகாந்த் பதில் |”I am acting with Simran after the movie ‘Petta’!” – Rajinikanth’s reply.

இந்தப் ப்ராஜெக்ட்டிற்கு அஸ்வத் மாரிமுத்து நான்காவது டைரக்டர். முதலில் ரவிக்குமாரை ஃபிக்ஸ் செய்திருந்தோம். பிறகு, சுந்தர்.சி. அவருக்கும் வேறொரு படம் இருந்தது. அதனால் தாமதமாவதாக இருந்தது. அதனால் விலகிக் கொள்ளலாம் என முடிவு செய்தோம். பிறகு சிபி சக்ரவர்த்தி. அவரிடம் கதையெல்லாம் கேட்டேன். அது ரொம்பவே சென்சிடிவ் சப்ஜெக்ட். அது அணு விஞ்ஞானி பற்றிய கதை. ஷூட்டிங் ஆப்கானிஸ்தான், ரஷ்யா போன்ற இடங்களில் படப்பிடிப்பை நடத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல், அந்த சென்சிடிவ் சப்ஜெக்டை ஜாக்கிரதையாகவும் செய்ய வேண்டும்.…

கத்தார் தொழிற்சாலை வெடிப்பு விபத்து – உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினர் வேதனை

பட மூலாதாரம், Handoutபடக்குறிப்பு, கத்தார் தீ விபத்தில் உயிரிழந்த தமிழரான பபித்கட்டுரை தகவல்எழுதியவர், சிராஜ்பதவி, பிபிசி தமிழுக்காகபிரசுரிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை மண்டலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) இரவு ஏற்பட்ட விபத்தில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பபித் (26), சஜித்குமார் (25), சுவின் (24) ஆகிய மூவர் உயிரிழந்துள்ளனர்.அவர்களது உடல்களை இந்தியா கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசுடன் இணைந்து மேற்கொண்டுவருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.கத்தாரின்…

குலசேகரன்பட்டினம்: தம்பதியினர் மீது கோயில் பணியாளர்கள் தாக்குதல்; பரவும் வீடியோ… நடந்தது என்ன?

உலக புகழ்பெற்ற தசரா திருவிழா நடைபெறும் குலசேகரன்பட்டினம், அருள்மிகு முத்தாரம்மன் கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வாரத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுகிழமை மற்றும் விடுமுறை நாட்களில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கார், வேன்களில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இத்திருக்கோயிலில் நிரந்தர பணியாளர்கள் மட்டுமின்றி தற்காலிக மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்காலிக, ஒப்பந்த பணியார்கள் திருக்கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம் அத்துமீறுவது, அவதுறான வார்த்தைகளால் பேசுவது உள்ளிட்ட…

அடிக்கடி தலைமுடி சீவுவது நல்லதா? முடி பாதிக்காமல் சீவுவது எப்படி?

கட்டுரை தகவல்எழுதியவர், சோபியா குவாக்லியா பிரசுரிக்கப்பட்டது 37 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்அடர்த்தியான மற்றும் பளபளப்பான தலைமுடியின் ரகசியம், உங்கள் முடியின் தன்மை முதல் சீப்பின் வடிவமைப்பு வரை எல்லாவற்றிலும் ஒளிந்துள்ளது.எனது தலைமுடியின் ஸ்டைலை நானே முடிவு செய்யும் அளவுக்கு வளர்ந்த காலம் தொட்டு, எனது முடி முதுகின் கீழ் பகுதி வரை நேராகவே இருந்து வருகிறது. சிறுவயதில், நான் ஒரு நாளைக்கு பலமுறை தலை முடி சீவுவேன்.தலை முடி சீவும்போதெல்லாம் ஆஸ்திரியாவின் ராணி சிசியைப்…

திருச்செந்தூர்: சேவைக் கட்டணங்களை உயர்த்த கோயில் நிர்வாகம் முடிவு; பக்தர்கள் அதிர்ச்சி! | The temple administration has decided to increase service fees at Tiruchendur Subramania Swamy Temple

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா போன்ற கட்டண சேவைகளின் தொகையை அதிகரிக்க திருக்கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக  பக்தர்களிடமிருந்து கருத்து கேட்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “அதிகளவு உயர்ந்துள்ள விலைவாசியைக் கருத்தில் கொண்டும், திருக்கோயிலுக்கான வருவாய் குறைவை ஈடு செய்யும் வகையிலும், நிர்வாகத்தின் நலன் கருதியும் தக்கார் தீர்மானத்தின் அடிப்படையிலும் தற்போதுள்ள சேவைக் கட்டணங்கள் மற்றும் அபிஷேக, சிறப்புத் தரிசனக் கட்டணங்களை உயர்த்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.  திருச்செந்தூர் தங்கரத…