தனியார் பள்ளிகள் சங்க தலைவர் பி.டி.அரசகுமார் மீது வழக்கு பதிவு: மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை!

Share

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் (பதிவு செய்யப்படாத அமைப்பு) நிறுவனர் தலைவரான பி.டி.அரசகுமார் உள்ளிட்டோர் மீது தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் இருந்து சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாக கூறப்படும் புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக (A1) சென்னை சாலிகிராமம், மெஜஸ்டிக் காலனியில் வசிக்கும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் நிறுவனர் தலைவரான பி.டி.அரசகுமார் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

இரண்டாவது குற்றவாளியாக (A2) சங்கத்தின் பொருளாளரான முத்துக்குமார் பெயர் இடம் பெற்றுள்ளது. மேலும், சிலர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி நிர்வாகங்களிடம், பள்ளி அங்கீகாரம் (Recognition), பள்ளி தர உயர்வு (Upgradation), CMDA மற்றும் DTCP அனுமதிகள் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளை அரசியல் மற்றும் அதிகாரிகள் செல்வாக்கு மூலம் பெற்றுத் தருவதாக உறுதியளித்து, பணம் வசூலித்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட மத்திய குற்றப்பிரிவு போலீஸார், பி.டி.அரசகுமார், முத்துக்குமார் மற்றும் பிறர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட நிதி பரிவர்த்தனைகள், ஆவணங்கள் மற்றும் பள்ளி நிர்வாகங்களிடம் பெறப்பட்டதாக கூறப்படும் தொகைகள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com