காலிறுதி போட்டி வரை முன்னேறிய சென்னை வீராங்கனைகள்!
தெருவோரக்குழந்தைகளுக்கென நடத்தப்படும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில், சென்னையை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்று காலிறுதிவரை முன்னேறி சாதனை நிகழ்த்தினர்.தெருவோர குழந்தைகளின் அடையாளத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் சர்வதேச அரங்கில் களமாடிய பிஞ்சுக் கால்களின் கண்ணீர் கோரிக்கையை விவரிக்கிறது இந்த தொகுப்பு.உலகின் உச்சபட்ச விளையாட்டுத்திருவிழா என்ற கேள்விக்கு நம் அனைவரின் ஒட்டுமொத்த பதிலாக இருப்பது ஃபிஃபா உலகக் கோப்பை. உலகமே கொண்டாடும் கால்பந்து உலகக் கோப்பை திருவிழாவிற்கு முன், போட்டி நடைபெறும் அதே மைதானத்தில் ஒவ்வொரு முறையும் உலகெங்கிலும் வசிக்கும்…









