திருப்பூர்: `அழுகிய முட்டையில் ஆஃப்பாயில், கேக்'- ஆய்வுக்குச் சென்ற இடத்தில் அதிர்ந்துபோன அதிகாரிகள்
நாமக்கல் மாவட்டத்திலுள்ள உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட சிறுமி அண்மையில் உயிரிழந்தார். இதையடுத்து, உணவகங்களில் பயன்படுத்தும் இறைச்சி உள்ளிட்ட பொருள்களின் நிலை குறித்து மாவட்டந்தோறும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதில், குறிப்பாக தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் திருப்பூரில் கடந்த இரண்டு வாரங்களாக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் இறைச்சிக் கடைகளில் நடைபெற்ற ஆய்வில் சுமார் 30 கிலோ இறந்த கோழிகள், இறைச்சிக்காக விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதுடன், அதன் உரிமையாளர்களுக்கு…









