Browsing: அரசியல்

‘இபிஎஸ், ஓபிஎஸ்சுக்கு புத்தி சொல்லுங்க’ எம்ஜிஆர் சிலை முன் பிரமுகர் புலம்பல்

குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதிகளில் நேற்று அதிமுகவின் 51வது ஆண்டு விழாவையொட்டி ஆங்காங்கே கொண்டாட்டங்கள் நடந்தன. இதேபோல் காமராஜர் பாலம் அருகே உள்ள அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் அக்கட்சியினர் விழா நடத்தி தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர். தலைவர்களின் சிலைகளுக்கு இபிஎஸ், ஓபிஎஸ் அணியினர் மற்றும் அமமுக அணியினர் என 3 குழுவினரும் தனித்தனியாக ஊர்வலமாக சென்று மாலை அணிவித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.அப்போது அங்கு வந்த அதேபகுதியை…

தமிழக சட்டமன்றத்தில் அதிமுக இருக்கைகள் தொடர்பாக எஸ்.பி.வேலுமணி தலைமையில் பழனிச்சாமி தரப்பு எம்.எல்.ஏ.-க்கள் சபாநாயகருடன் சந்திப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று 2-வது நாளாக கூடுகிறது. ஏற்கனவே தமிழக சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் எதிர்க்கட்சி துணைத்த்தலைவர் யார்? என்பது குறித்து கேள்விகள் எழுந்த நிலையில் எந்த ஒரு மாற்றமும் இன்றி, நேற்றையதினம் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் எம்.எல்.ஏ.க்கள் யாரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவில்லை. ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 3 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே நேற்றைய தினம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொண்டார். 2-ம் நாளான இன்றைய…

அலுவல் ஆய்வுக்குழுவின் தீர்மானத்தை முழு மனதுடன் ஏற்றுக் கொள்கிறோம்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று காலையில் முடிந்த பிறகு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக சட்டப் பேரவை தலைவர், சட்டமன்றக் கூட்டம் நடைபெறுவது குறித்தும், கலந்து கொள்வது குறித்தும் எங்களுக்கு தகவல் வந்தது. அதிமுக சார்பாக எங்களது ஜனநாயக கடமையாற்றுவதற்காக சட்டப் பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளோம். ஏற்கனவே, சட்டப் பேரவைக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாகவே சபாநாயகரை சந்தித்து மனு அளித்துள்ளோம். அலுவல் ஆய்வுக்குழுவில் நிறைவேற்றப்படுகின்ற தீர்மானங்களை முழு மனதுடன் ஏற்றுக் கொள்கிறோம்.…

சொல்லிட்டாங்க…

* பாஜவால் நாட்டிற்கு எந்த பயனும் இல்லை. ஒன்றிய பாஜ அரசு இந்தியை திணித்தால் தமிழ்நாட்டில் எதிர்ப்பு குரல் பொங்கி எழும். காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் * அனுபவத்துக்கு இணை எதுவும் இல்லை. கட்சியின் இளம் தலைவர்கள் அவர்களுக்கான வாய்ப்பு கிடைக்கும் வரை பொறுமை காக்க வேண்டும். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்* தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவேன் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. என்னால் செய்ய முடிகின்ற அனைத்து காரியங்களையும் செய்து விட்டேன்.…

காங்கிரஸ் தலைவர் தேர்தல் மல்லிகார்ஜூன கார்கே இன்று சென்னை வருகை: சத்தியமூர்த்தி பவனில் ஆதரவு திரட்டுகிறார்

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் மல்லிகார்ஜூன கார்கே இன்று சென்னை வருகிறார். சத்தியமூர்த்திபவனில் தமிழக காங்கிரசார் மத்தியில் ஆதரவு திரட்டுகிறார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் சசி தரூர் மற்றும் ராஜ்யசபா காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதையடுத்து, கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பு சென்னை வந்த சசி தரூர், சத்தியமூர்த்தி பவனில் தமிழக…

“ஓபிஎஸ் தரப்புன்னா 4 பேர்தான், இபிஎஸ் தலைமைல தான் அதிமுக இருக்கு” – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: ஓபிஎஸ் தரப்புன்னா 4 பேர்தான், இபிஎஸ் தலைமைல தான் அதிமுக இருக்கு என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை தொடங்கியதும் மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் 2 நாள் கூட்டத்தை நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதேநேரத்தில் பேரவையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடத்தை மாற்றிக் கொடுக்காததால், கூட்டத்தில் எடப்பாடியும், அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் பங்கேற்கவில்லை. இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள…

காங்கிரஸ் தலைவர் தேர்தல் முக்கிய நிர்வாகிகளுக்கு வாக்களிக்க கட்டுப்பாடு: பொறுப்பாளர் மிஸ்திரி உத்தரவு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கட்சியின் அனைத்து பொதுச் செயலாளர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள், செயலாளர்கள் மற்றும் இணைச் செயலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்திலோ அல்லது இங்குள்ள கட்சித் தலைமையகத்திலோ வாக்களிக்க வேண்டும் என கட்சியின் மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 17ம் தேதி நடைபெறுகிறது. காங்கிரசின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கேவும், ஜி-23 தலைவர்களில் ஒருவரும், திருவனந்தபுரம் எம்பி.யுமான சசி தரூரும் இதில்…

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி குருபூஜையில் பிரதமர் பங்கேற்கவில்லை: பாஜ தலைவர் அண்ணாமலை பேட்டி

சென்னை: தமிழகத்தில் வரும் 30ம் தேதி நடைபெறும் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி குருபூஜை விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ளவில்லை என மாநில பாஜ தலைவர் அண்ணாமலை கூறினார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு நேற்று காலை சென்னை வந்தார். விமானநிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்தியை முதன்முதலில் இந்தியாவில் கட்டாய மொழியாக திணித்தது காங்கிரஸ்தான். பிரதமர் மோடி அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கை திட்டம், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆறாம்…

சொல்லிட்டாங்க…

* அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட மாநில நெடுஞ்சாலைகளை மாநில அரசிடம் இருந்து ஒன்றிய அரசு எடுத்து கொள்ளும்.- ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி* பிரஜா ராஜ்யம் கட்சியை ஆரம்பித்த சிரஞ்சீவி, பரிசு கிடைத்தவுடன் கட்சியை கலைத்தார். அதையே பவன் கல்யாண் செய்வார்.- நடிகை ரோஜா எம்எல்ஏ* இந்திய ரூபாயின் மதிப்பு சரியவில்லை. மாறாக, அமெரிக்க டாலரின் மதிப்பு தான் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. – ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்* பாஜ, பெரிய வணிகர்களுக்கு ஆதரவாக…

காங், ஒரு காலமும் இந்தி திணிப்பை ஆதரித்தது கிடையாது: கே.எஸ்.அழகிரி

சென்னை: காங், ஒரு காலமும் இந்தி திணிப்பை ஆதரித்தது கிடையாது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். மோடி, அமித்ஷா- வை போல இந்தி அனைத்து இடங்களிலும் இருக்க வேண்டும் என ராஜீவ் காந்தி கூறியதில்லை. பாரதிய ஜனதா கட்சியினர் முன்னுக்கு பின் முரண்பாடாக பேசி வருகின்றனர் எனவும் குற்றம் சாட்டினார். Source link

1 78 79 80 81 82 161