விஜய் தலைமையிலான எம்.பி.க்கள் கூட்டத்தில் என்ன பேசப்பட்டது? எந்தெந்த கட்சிகள் புறக்கணித்தன?

Share

விஜய் தலைமையிலான எம்.பி.க்கள் கூட்டத்தில் என்ன பேசப்பட்டது? எந்தெந்த கட்சிகள் புறக்கணித்தன?

பட மூலாதாரம், DIPR

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதா வந்தால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து விவாதிக்க, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 8) எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது..

இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் தனித்தனியாக அழைப்பு விடுக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 57 எம்.பி.க்கள் உள்ள நிலையில், முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 19 எம்.பி.க்கள் மட்டுமே பங்கேற்றனர்.

திமுக, அதிமுக, தேமுதிக, பாமக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்த நிலையில், தவெகவுக்கு ஆதரவளிக்கும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

அதன்படி, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்.) உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 19 எம்.பி.க்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com