கரூர்: ‘சிகரெட் கேட்டா, பீடி தருவியா?’ – மளிகை கடைக்குள் மண்ணெண்ணெய் குண்டு வீசிய இளைஞர்
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கருப்பகவுண்டன் புதூர் மேற்கு, கங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது: 52). இவருக்கு தமிழரசி (வயது: 42) என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இவர், கங்கா நகர் சந்திப்பில் அமைந்துள்ள தனக்கு சொந்தமான வீட்டின் முன் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த முகமது அன்சாரி (வயது: 24) என்ற இளைஞர் மளிகை கடைக்கு வந்து சிகரெட் கேட்டுள்ளார். கடைக்காரர் சுப்பிரமணி, ’சிகரெட்…









