`மொழி’ குறித்த ஜெக்தீப் தன்கரின் பேச்சு: `பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது’ – கனிமொழி ட்வீட் | Kanimozhi Sla ms BJP on Hindi Imposition Row
Kanimozhi ட்வீட்ஜெக்தீப் தன்கரின் பேச்சை சுட்டிக்காட்டி, இந்தித் திணிப்பு விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்திருக்கிறார், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி. முற்காலத்தில் இஸ்லாமியர்கள் இந்தியாவின் கலாசாரம் மற்றும் மொழியை அழிக்க முயன்றாகக் கூறும் ஜெக்தீப் தன்கரின் பேச்சை, இன்று மத்திய அரசு இந்தியை திணிப்பதன் மூலம் தமிழ்நாட்டின் மொழி மற்றும் கலாசாரத்தை சிதைக்க முயல்வதாக பொருள்படும்படி ட்வீட் செய்துள்ளார் கனிமொழி. ஜகந்தீப் தன்கரின் பேச்சு குறித்த செய்தியை ரீ ட்வீட் செய்து, “பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது” என…









