கூடலூர்: காப்பி தோட்டத்தில் மர்மமாக இறந்து கிடந்த ஆண் யானை; தீவிர விசாரணையில் வனத்துறை!
ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றாக விளங்கி வரும் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் வனக்கோட்டத்தில், தொடரும் ஆக்கிரமிப்புகளால் யானைகளின் வழித்தடங்கள் துண்டாடப்பட்டு வருகின்றன. தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய நீர்நிலைகளுக்கு இடம்பெயர முடியாமல் யானைகள் தவித்து வருகின்றன. குடியிருப்பு பகுதிகளை நோக்கி வரும் யானைகளால் அப்பாவி பழங்குடிகளும் தோட்ட தொழிலாளர்களும் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். அதேவேளையில் மனித தவறுகளால் யானைகளும் உயிரிழந்து வருகின்றன.யானை இறப்பு இந்த நிலையில் கூடலூர் அருகில் உள்ள இருவயல் தனியார் காப்பி…









