கீர்த்தி சுரேஷ், கிருத்தி ஷெட்டியின் கையைத் தொட்டுப் பேசிய இயக்குநர் – கண்டிக்கும் நெட்டிசன்கள்!
தெலுங்குத் திரையுலகின் மூத்த இயக்குநர் கே.ராகவேந்திர ராவ், ஹைதராபாத்தில் நடைபெற்ற புதிய திரைப்படத் தொடக்க விழாவில் நடந்துகொண்ட விதம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷ், நந்தமுரி கல்யாண் ராம், கீர்த்தி சுரேஷ் மற்றும் கிருத்தி ஷெட்டி ஆகியோர் நடிக்கும் புதிய படத்தின் பூஜை ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த், தில் ராஜு, சுரேஷ் பாபு உள்ளிட்ட டோலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். விழாவின் ஒரு…





