Soft Baseball: நேபாளத்தில் தங்கம் வென்ற தமிழ்நாடு மாணவிகள்: உலகக்கோப்பையை வெல்ல தீவிர பயிற்சி !

Share

விளையாட்டு உலகில் கிரிக்கெட், கால்பந்து, வாலிபால் போன்ற போட்டிகள் அனைவருக்கும் பரிச்சயமானவை. ஆனால், பலருக்கும் அதிகம் அறிமுகமில்லாத சாஃப்ட் பேஸ்பால் (Soft Baseball) விளையாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று மாணவிகள் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளனர்.

நேபாளத்தில் அண்மையில் நடைபெற்ற தெற்கு ஆசிய அளவிலான சாஃப்ட் பேஸ்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா, நேபாளம், பூட்டான், இலங்கை, மாலத்தீவு மற்றும் தாய்லாந்து ஆகிய ஆறு நாடுகள் பங்கேற்றன. இந்திய அணியில் மொத்தம் 20 மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் ஐந்து பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இரண்டு பேர் கோயம்புத்தூர், மூன்று பேர் சேலம்.

அவர்களில் சேலத்தைச் சேர்ந்த லாரண்யா, அபிநயா மற்றும் தன்ஷிகா ஆகிய மூன்று மாணவிகள் இந்திய அணிக்காக விளையாடி தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.

இந்த வெற்றிக்குப் பின்னால் கடின உழைப்பும், தொடர்ச்சியான பயிற்சியும் இருப்பதாக மாணவிகள் தெரிவித்தனர். சாஃப்ட் பேஸ்பால் விளையாட்டைப் பற்றி பேசிய தன்ஷிகா, “இந்த விளையாட்டை முதன்முதலில் எங்களுக்கு ஸ்போர்ட்ஸ் டீச்சர் அறிமுகப்படுத்தினார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com