திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி ரூ.2,203 கோடி குறைய என்ன காரணம்? ஒரு பார்வை

Share

 திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி, ஆயத்த ஆடை, தொழில்துறை, ஜவுளித்தொழில்
படக்குறிப்பு, கோப்புப் படம்

இந்தியாவின் ஆயத்த ஆடை (RMG) ஏற்றுமதியில் 35 சதவீதம் பங்களித்து வரும் திருப்பூரிலிருந்து முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் ரூ.2203 கோடிக்கு ஏற்றுமதி குறைந்துள்ளது.

அமெரிக்காவின் சுங்கவரி தொடர்பான பிரச்னை, மேற்காசியாவில் நிலவும் நெருக்கடி, கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்ட பாதிப்பு ஆகியவை இதற்குக் காரணங்களென்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் கூறுகிறது.

ஆனால், இதனை இந்திய ரூபாயின் மதிப்பை வைத்துக் கணக்கிடுவது சரியாக இருக்காது என்கிறது இந்திய ஜவுளித்தொழில் கூட்டமைப்பு.

எதிர்காலத்தில் ஏற்றுமதிக்கான வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில், மற்ற பிரச்னைகளை விட, திருப்பூரில் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்னை பெரிதாகி வருவதாகக் கூறுகிறார் இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன்.

இதை ஒப்புக்கொள்ளும் ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள், அதற்காகவே தொழிலாளர்களுக்கான விடுதிகளை அமைக்குமாறு அரசிடம் கோரிக்கை வைத்திருப்பதாகத் தெரிவித்தனர். இதற்கான கட்டமைப்பை தொழில் நிறுவனங்களே உருவாக்கிக் கொள்ளும்பட்சத்தில் அதற்குரிய மானியம் மற்றும் வரிச்சலுகை வேண்டுமென்று அவர்கள் கோருகின்றனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com