டெல்லி ஃபைஸ்-இ-இலாஹி மசூதியை ஒட்டிய பகுதிகள் இடிக்கப்பட்டது ஏன்? மக்கள் என்ன சொல்கிறார்கள்?
படக்குறிப்பு, டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.கட்டுரை தகவல்டெல்லியில் உள்ள துர்க்மேன் கேட்டிற்கு அருகில் உள்ள ஃபைஸ்-இ-இலாஹி மசூதிக்கு அருகிலுள்ள ஆக்கிரமிப்புகள் நேற்றிரவு இடிக்கப்பட்டன. ஆக்கிரமிப்புகளை அகற்றும் இந்த நடவடிக்கை டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு எடுக்கப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கையின் போது, உள்ளூர் மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீச வேண்டியிருந்தது.டெல்லி காவல்துறையின் மூத்த அதிகாரி நிதின் வல்சன், “சுமார் 25-30…








