முதல்வரான பிறகு முதல் கூட்டத்தில் விஜய் பேசிய 7 விஷயங்கள் என்ன?

Share

விஜய்

பட மூலாதாரம், Youtube/TVK

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்றார்.

‘திருச்சி மாவட்ட மக்கள் சந்திப்பு மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில்’ உரையாற்றிய அவர், தேர்தலில் அளித்த ஆதரவுக்காக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த விஜய், பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்த நிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தான் கோட் சூட் போடுவது, தவெகவுக்கு யாருடன் போட்டி, தவெக தொண்டர்கள் மீது வைக்கப்படும் விமர்சனம், திமுக மீது விமர்சனம், அதிமுக உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விஜய் பேசினார்.

இந்த நிலையில், திமுக மீதான விஜயின் விமர்சனத்துக்கு பதிலளித்த திமுக எம்.பி கனிமொழி, “அவர்கள் இன்று ஆளுங்கட்சியில் இருக்கிறார்கள். சரியான ஆட்சியை நடத்துவதற்கான வழிமுறைகளை அறிந்துகொள்ள வேண்டுமே தவிர, திமுகவைக் குறை கூறிக்கொண்டிருப்பதால் மக்கள் அரசின் தவறுகளையும் சட்டம் – ஒழுங்கு பிரச்னைகளையும் மறந்துவிட மாட்டார்கள்” என்று தெரிவித்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com