Daily Archives: June 13, 2026

கூட்டணியிலிருந்து வெளியேறும் கட்சிகள் – மாநிலத்தில் தனித்து விடப்படுகிறதா திமுக?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்பிரசுரிக்கப்பட்டது 39 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்தமிழகத்தில் திமுக கூட்டணியிலிருந்து முக்கிய கட்சிகள் அனைத்தும் வெளியேறிவரும் நிலையில், திமுக தனித்துவிடப்பட்டிருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. கட்சியைப் பலப்படுத்தினால் யாரும் இல்லாமல் திமுகவால் வெற்றி பெற முடியுமென்று திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்.பியுமான கனிமொழி கூறியுள்ளார்.திமுகவுக்கு இத்தகைய சூழல் ஒன்றும் புதிதல்ல என்று கூறும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், ஆனால் திமுகவின் அடிமட்டத் தொண்டர்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தியை சரி செய்ய வேண்டிய…

10 வயதில் அண்ணன் வைபவ் போல சதம் விளாசிய ஆசீர்வாத் சூர்யவன்ஷி: Aashirwad Suryavanshi, who smashed a century at age 10 like his elder brother Vaibhav: Cricket’s next big sensation!

அண்ணன் வைபவ் எப்படி பந்துவீச்சாளர்களை இரக்கமின்றி ஆக்ரோஷமாக எதிர்கொள்வாரோ, அதே பாணியைத்தான் தம்பி ஆசீர்வாத்தும் கையில் எடுத்துள்ளார். இருவருக்குமே களத்தில் தற்காப்பு ஆட்டத்தை விட, முதல் பந்திலிருந்தே அதிரடியாக மட்டையைச் சுழற்றி ஆதிக்கம் செலுத்துவதுதான் மிகவும் பிடிக்கும். அண்ணனின் ஆட்டத்தை நேரில் பார்த்து வளர்ந்ததால், அதே போன்றதொரு வெறியோடு சிறு வயதிலேயே தீவிர கிரிக்கெட் பயிற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் ஆசீர்வாத்.ஆசீர்வாத்தின் இந்த முதல் சதத்தின் புகைப்படங்கள், ஸ்கோர்கார்டை அவரது மூத்த சகோதரர் உஜ்வால் சமூக வலைத்தளங்களில்…

"வழிமுறை தெரியாது..": நழுவும் தலைமை மருத்துவர் : மரங்களை வெட்டிய தேவகோட்டை அரசு மருத்துவமனை

” பிள்ளைகளைப்போல வளர்த்தோம்..!”சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பி.எஸ்.எஸ். சாத்தப்ப செட்டியார் அரசு மருத்துவமனை வளாகத்தில் பல ஆண்டுகளாக நிழல் தந்து வந்த மரங்கள் திடீரென வெட்டிச் சாய்க்கப்பட்ட சம்பவம், தேவகோட்டை பகுதி சமூக ஆர்வலர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இதுகுறித்து நம்மிடம் வேதனையோடு பேசினார், இந்த மரங்களை நட்டுப் பராமரித்தவர்களில் ஒருவரான தேவகோட்டை நண்பர்கள் நடையாளர் சங்கத்தின் முக்கியப் பொறுப்பாளரும் ஓய்வு பெற்ற பேராசிரியருமான எஸ். குமரப்பன்:”சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் சங்கத்தின் மூலமாக இந்த…

அதிகாலை 2 முதல் 3 மணிக்குள் விழித்தால் ஒரு சிலருக்கு மீண்டும் தூக்கம் வராதது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், ஓம்கார் கரம்பேல்கர்பதவி, பிபிசி மராத்திபிரசுரிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 11 நிமிடங்கள்இரவில் வழக்கம் போல உறங்கிக் கொண்டிருக்கும் போது, திடீரென அதிகாலை 2 அல்லது 3 மணியளவில் விழிப்பு வந்த அனுபவம் உண்டா? அப்படி விழித்த பிறகு, நீண்ட நேரம் மீண்டும் தூங்க முடியாமல் தவிப்பது இன்னும் அதிகமாக எரிச்சலூட்டும் விஷயமாக இருக்கும்.மன அழுத்தம் காரணமாகவே இப்படி நடப்பதாகப் பலர் கருதுகிறார்கள். சிலர் இது ஏதோ தீவிர உடல்நலப்…

’மின்வெட்டு ஏற்படுவதற்கு திமுகவே காரணம்’ – அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு

கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “மேட்டூர் அணையை பொறுத்தவரை நீர்பிடிப்பு பகுதிகளில் மழைக்குறைவாக இருக்கிறது. தண்ணீர் வரத்தும் குறைவாக இருக்கிறது. 2017- 18 ஆண்டிலும் தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டது. 2019-யிலும் அதே நிலை தான் இருந்தது. மேட்டூர் அணையில் தண்ணீர் கூடுதலாக இருந்தால் மட்டும்தான் திறக்க முடியும். இதை மனதில் வைத்து பிரதமருடன் முதல்வர் பேசும்போது, நமக்குத் தேவையான நீர் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறார்.…