கோவில்பட்டி: கனிமொழிக்கு வழங்கப்பட்ட அசைன்மென்ட்; கைகொடுத்த சமூக வாக்குகள் – திமுக சாதித்த பின்னணி!
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளில், தி.மு.க-வும் த.வெ.க-வும் தலா 3 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கின்றன. இதில், ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவிர 5 தொகுதிகளிலும் அ.தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சியான அ.ம.மு.க மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. தேர்தல் பிரசாரத்தின்போது, கோவில்பட்டி தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருந்துவந்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, “கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில், இதுவரை நடந்த 16 தேர்தல்களில் தி.மு.க ஒருமுறைகூட வென்றது இல்லை; இனி வெல்லப்போவதும் இல்லை.…



