ரஜத் பட்டிதருக்காக அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கோலி! – நடந்தது என்ன?

Share

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இதில் குஜராத் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

GT vs RCB Match
GT vs RCB Match

இந்த ஆட்டத்தின்போது ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் ஆட்டமிழந்த விதம் குறித்து அதிருப்தி அடைந்த விராட் கோலி, மைதானத்தின் வெளியே இருந்த நான்காவது அம்பயருடன் ஆக்ரோஷமாக விவாதித்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.

இந்த போட்டியில், அர்ஷத் கான் வீசிய எட்டாவது ஓவரில் படிதார் அடித்த பந்தை ஜேசன் ஹோல்டர் கேட்ச் பிடித்தார். ஆனால், அந்த கேட்சை பிடிக்கும் போது பந்து தரையில் பட்டதாக மறுஆய்வில் சந்தேகங்கள் எழுந்தன.

இருப்பினும், மூன்றாவது நடுவர் அந்த கேட்சை சரி என அறிவித்து படிதாரை ஆட்டமிழந்ததாக அறிவித்தார். ஏற்கனவே ஆட்டமிழந்து வெளியே அமர்ந்திருந்த விராட் கோலி, இந்த முடிவைக் கண்டு கடும் அதிருப்தி அடைந்தார்.

நடுவரின் தவறான முடிவால் அதிருப்தியடைந்த அவர், மைதானத்திற்கு வெளியே இருந்த நான்காவது நடுவரிடம் மிகவும் ஆவேசமாக வாதிட்டது மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விராட் கோலி
விராட் கோலி

ஐபிஎல் விதிமுறைப்படி , ஒரு பீல்டர் பந்தை பிடிக்கும்போது கை தரையில் படலாம், ஆனால் பந்து தரையில் படக்கூடாது.

ஹோல்டர் பந்தை தரையில் தட்டியது போல் தெரிந்தும் நடுவர் அவுட் கொடுத்தது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com