மத்திய கிழக்கில் மேகங்களை அமெரிக்கா திருடியதா? குற்றச்சாட்டும் அறிவியல் உண்மையும் என்ன?

Share

தெஹ்ரானில் முக்காடு அணிந்த பெண்கள் பிரார்த்தனை செய்வதைக் காணலாம். பெரும்பாலான உருவங்கள் கருப்பு நிறத் தலையணிகளை அணிந்து கீழே குனிந்து பார்ப்பதைக் காணலாம், ஆனால் படத்தின் மையத்தில் கண்ணாடி அணிந்த ஒரு பெண் தனது முகத்தை உயர்த்தி கண்களை மூடி பிரார்த்தனையில் கைகளை ஏந்தியிருப்பதைப் பார்க்கலாம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரான் 60 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான வறட்சியைச் சந்தித்தபோது, கடந்த நவம்பரில் தெஹ்ரானில் மக்கள் மழைக்காகப் பிரார்த்தனை செய்தனர்

இரான் உடனான அமெரிக்க-இஸ்ரேல் போர் மத்திய கிழக்கில் “மேகத் திருட்டு” நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் ஆதாரமற்ற புகார்கள் பரவி வருகின்றன.

ஒரு வாரத்திற்கு முன்பு அல்-ரஷீத் தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில், இராக் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா அல்-கைகானி, அண்டை நாடுகளான துருக்கியும் இரானும், விமானங்களைப் பயன்படுத்தி “மேகங்களை உடைக்கவும்” மற்றும் “திருடவும்” அமெரிக்கா எடுக்கும் முயற்சிகள் குறித்து “புகார் அளித்துள்ளதாக” கூறினார்.

எந்த ஆதாரத்தையும் முன்வைக்காமல், அமெரிக்கா இரானில் “போரில் மும்முரமாக” இருப்பதால், “சமீபத்திய நாட்களிலும் மாதங்களிலும் இராக்கிற்கு மழை திரும்பியுள்ளது” என்று அவர் கூறினார்.

மனிதர்கள் மேகங்களைத் “திருட” அனுமதிக்கும் எந்தத் தொழில்நுட்பமும் இதுவரை இல்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இராக் வானிலை ஆய்வு மையத்தின் செய்தித் தொடர்பாளர் அமர் அல்-ஜபிரி, இந்த புகாரை “அறிவியல் பூர்வமானது அல்ல, தர்க்கரீதியானதும் அல்ல” என்று விவரித்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே – அதாவது பிப்ரவரி 28 அன்று போர் தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்பே – 2026 ஆம் ஆண்டு இராக்கில் மழைப்பொழிவு மிகுந்த ஆண்டாக இருக்கும் என்று கணிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com