`நீ உயிரோட இருந்தா பல குடும்பத்தை சீரழிச்சிடுவ!’ – மனைவியின் காதலனை ஸ்கெட்ச் போட்டு `முடித்த’ கணவன்

Share

இறுதியாக சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து கொலை செய்வது என்று முடிவெடுத்திருக்கிறார்கள். அதன்படி மே மாதம் 23-ம் தேதி மாலை கதிரேசனுக்குப் போன் செய்த ஞானவேல், சாமதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறார்.

அதன்படி வழுதாவூர் பகுதியிலுள்ள சிவன் கோயிலுக்கு அருகிலிருக்கும் இடத்திற்கு சென்றார் கதிரேசன். அங்கு ஞானமூர்த்தி, கோகுல், ஞானவேல் மூவரும் காத்திருந்தனர். அப்போது, `நீ ஞானமூர்த்தி மனைவிகிட்ட நீ ஏன் பேசுற ?

அது அவனுக்குப் பிடிக்கலைன்னு சொல்லியும் நீ ஏன் பேசுற?’ என்று கோகுலும், ஞானவேலும் கதிரேசனிடம் கேட்டிருக்கின்றனர். அதற்கு, `இவன் தப்பா நினைக்கிறான் என்பதற்காக நான் பேசாமல் இருக்க முடியுமா ? முதலில் இவன் ஏன் தப்பா நினைக்கிறான் ?

கைது செய்யப்பட்ட ஞானமூர்த்தி

கைது செய்யப்பட்ட ஞானமூர்த்தி

இவன் மனைவி என் தங்கச்சி மாதிரி’ என்று கூறியிருக்கிறார் கதிரேசன். அப்போது ஆத்திரமடைந்த ஞானமூர்த்தி, `நீ உயிரோட இருந்தா பல குடும்பத்தை சீரழிச்சிடுவ…’ என்று கூறியவாறே, கதிரேசனை தாக்கினார்.

அதில் நிலைகுலைந்து கீழே விழுந்த கதிரேசனின் கைகளை, நண்பர்கள் கோகுல், ஞானவேல் உதவியுடன் பின்புறமாக பிளாஸ்டிக் சாக்கால் கட்டினார் ஞானமூர்த்தி. அதையடுத்து தயாராக வைத்திருந்த அரிவாள்களால், கதிரேசனின் பின் கழுத்தை குறி வைத்து வெட்டி மூவரும் வெட்டியிருக்கிறார்கள்.

அதில் துடிதுடித்து அங்கேயே உயிரிழந்திருக்கிறார் கதிரேசன். அவர் துடித்து அடங்கும்வரை காத்திருந்த மூவரும், அதன்பிறகு மூச்சு வருகிறதா என்று பார்த்து அவர் உயிரிழந்ததை உறுதி செய்திருக்கிறார்கள். அதன்பிறகு சாவகாசமாக அங்கிருந்து சென்றிருக்கிறார்கள்” என்றனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com