இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்தர் சேவாக், சாய் சுதர்சனை விமர்சித்திருக்கிறார்.
“சாய் சுதர்சனுக்கு இனி ‘ஸ்டிராடஜிக் டைம்-அவுட்’ நேரத்தின் போது பேட்டில் தடவ பசை கொண்டு வர வேண்டும்.
கையுறையில் பசையைத் தடவிக்கொண்டால் பேட் அவரது கையை விட்டு நழுவாது. ஒரே தவறை எப்படித் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் செய்ய முடியும்?

ஒரு வீரர் தனது தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும் என்று சொல்வார்கள், ஆனால் இவர் கற்கவில்லை.
எனது நீண்டகால கிரிக்கெட் வாழ்க்கையில் ஒருமுறை கூட நான் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்ததில்லை” என்று விமர்சித்திருக்கிறார்.