அதற்கு முழு மூல காரணமான என்னுடைய ஆத்மார்த்த நண்பர் சகோதரர் ஆர்.ஜே. பாலாஜிக்கு நட்சத்திர எண்ணிக்கையில் நன்றி. அவரால்தான் இந்தப் படத்தில் எனக்குப் பாடல் எழுதுவதற்கான ஒரு மிகப்பெரிய பயணம் அமையப்பெற்றது.
ஆர்.ஜே. பாலாஜி எப்போதுமே தன்னுடைய படத்தில் எனக்கு மிக மிக முக்கியமான பாடலை எழுதக் கொடுப்பார். இப்போதும் என்னுடைய பாட்டுப் பயணத்தில் இந்தக் கருப்புப் பாடல் ஈடு இணையற்ற பாடலாக இன்று மாறியிருக்கிறது.
அதே போலவே இந்தப் பாடலுக்கு ஆக்ரோஷமாக இசையமைத்த சாய் அபயங்கருக்கும் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவுக்கும் என்னுடைய நன்றி.
சூர்யா சாரைப் பற்றிய ஒரு பிரேமைத்தான் ஆர்.ஜே. பாலாஜி கேட்டிருந்தார். அந்தப் பிரேமைப் பார்த்ததும் அந்தக் கண்களில் கசிந்த நெருப்புதான் இந்தப் பாடல் எழுதுவதற்கான ஒரு தூண்டுகோல் எனச் சொல்லலாம்.
அப்படிக் கனலும் கண்கள் கொண்ட என்னுடைய நண்பர் நடிகர் சூர்யாவுக்கும் என்னுடைய தனிப்பட்ட நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் பாட்டு வரிகளுக்கு ஏராளமான லட்சக்கணக்கான வாழ்த்துக்களை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கின்ற அத்தனை சோஷியல் மீடியா ரசிகர்களுக்கும், சினிமா ரசிகர்கள், திரை இசை ரசிகர்கள் எல்லோருக்கும் என்னுடைய ஆத்மார்த்தமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியிருக்கிறார்.