“இந்தச் சீசனில் எங்களது முதல் தோல்வி, எனவே இது நிறைய பாடங்களைக் கற்றுத் தரும்”- ஸ்ரேயாஸ் ஐயர் | “This is our first defeat of the season, so it will teach us a lot of lessons,” said Shreyas Iyer.

Share

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல். 29) ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பஞ்சாப் அணியும் மோதின.

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் 7 போட்டிகளில் ஒன்றில் கூட தோற்காத பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் முறையாகத் தோல்வியைச் சந்தித்தது.

இந்நிலையில் போட்டிக்குப் பிறகு அணியின் தோல்வி குறித்து பேசிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், “எங்கள் அணியின் பேட்ஸ்மேன்களுக்கு எனது பாராட்டுகள்.

அவர்கள் களமிறங்கிய விதமும், பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடிய விதமும் அற்புதமாக இருந்தது.

நாங்கள் பந்துவீச்சில்தான் கோட்டை விட்டுவிட்டோம் என்று நினைக்கிறேன். நிறைய ஸ்லோவர் பால்கள், யோர்க்கர்கள் போடத் திட்டமிட்டோம், ஆனால் அதைச் சரியாகச் செய்யவில்லை.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com