PM SHRI திட்டம்:`புதிய கல்விக் கொள்கையில் தமிழ்நாடு அரசின் முடிவென்ன?’ – கடிதம் எழுதிய மத்திய அரசு! | PM SHRI Scheme: ‘What is the Tamil Nadu Government’s decision regarding the New Education Policy?’

Share

மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ (PM SHRI) திட்டத்தில் இணையுமாறு தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் மீண்டும் கடிதம் எழுதியுள்ளது.

தேசியக் கல்விக் கொள்கையின் (NEP 2020) ஒரு பகுதியான இத்திட்டத்தில், மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளதால், முந்தைய தி.மு.க அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தது. இதன் விளைவாக, தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய சுமார் ரூ. 3,500 கோடி கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்தது, இது பள்ளிக் கல்வித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தேக்கநிலையை ஏற்படுத்தியது.

 பிரதமர் மோடி

பிரதமர் மோடி

தற்போது தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய அரசு அமைய உள்ள சூழலில், நிறுத்தி வைக்கப்பட்ட நிதியைப் பெறவும், திட்டத்தை அமல்படுத்தவும் ஏதுவாகப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது புதிய கல்விக் கொள்கையை ஏற்பதற்கும், மும்மொழிக் கொள்கையை அனுமதிப்பதற்கான ஒரு நிபந்தனையாகப் பார்க்கப்படுகிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com