“என் ஐபிஎல் பயிற்சிக் காலத்தில் மிகச் சிறந்த வெற்றி இதுவே” – ரிக்கி பான்டிங் பெருமிதம் | This is the best win of my IPL career – PBKS Head Coach Ricky Ponting is proud

ஐபிஎல் போட்டிகளில் பெரும்பாலும் வணிக நலன்களின் உத்திகள் சூப்பர் ஸ்டார் வீரர்களின் வர்த்தக நலன்கள் ஸ்பான்சர்கள், விளம்பரதாரர்கள், அணி உரிமையளர்களின் கணக்கீடுகளுக்குட்பட்டே வெற்றி, தோல்விகள் தீர்மானிக்கப்படுகின்றன. ஆனால், அப்படியும் சில போட்டிகள் உண்மையான சவாலாக அமைந்து விடுவதுண்டு, நேற்று நடந்த பஞ்சாப் கிங்ஸ் – கேகேஆர் போட்டி அத்தகைய தன்மை கொண்டது. அதனால்தான் வெற்றி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பான்டிங், தான் ஐபிஎல் பயிற்சியாளராக இருக்கும் காலத்தில் இந்த வெற்றிதான் மிகச் சிறந்த வெற்றி என்று பாராட்டுகிறார்.…

நெல்லை தனியார் பள்ளியில் சக மாணவர், ஆசிரியை மீது தாக்குதல் நடத்திய மாணவர் – என்ன நடந்தது?

பட மூலாதாரம், Handoutகட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ்15 ஏப்ரல் 2025புதுப்பிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர்(எச்சரிக்கை: இந்த கட்டுரையின் சில குறிப்புகள் உங்களுக்கு சங்கடம் தரலாம்)திருநெல்வேலியில் பென்சில் தகராறில் எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவரை சக மாணவர் ஒருவர் அரிவாளால் வெட்டியதாக காவல்துறையினர் கூறும் நிலையில், இதற்கு இந்த பிரச்னை மட்டும் காரணமல்ல என மாணவரின் பெற்றோர் கூறுகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட மாணவரை மாவட்ட குழந்தைககள் நல பாதுகாப்புக் குழுவிடம் ஒப்படைத்துவிட்டதாக, காவல்துறை அதிகாரிகள்…

PBKS vs KKR: “IPL-ல் எனக்குக் கிடைத்த சிறந்த வெற்றி” – நெகிழும் பஞ்சாப் பயிற்சியாளர் பாண்டிங்

போட்டி முடிந்த பின்னர் பேசிய பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், “இன்னும்கூட இதயத்துடிப்பு படபடப்பாகவே இருக்கிறது. எனக்கு 50 வயதாகிறது. இனிமேலும் இதுபோன்ற போட்டிகள் வேண்டாம். குறைந்த ரன்களை சேஸ் செய்வது சில சமயங்களில் கடினமாக இருக்கும் என்று ஆட்டத்தின் பாதியில் நாங்கள் கூறினோம். பிட்ச் இன்று அவ்வளவு ஈஸியாக இல்லை. சஹல் சிறப்பாகப் பந்துவீசினார். கடந்த போட்டியில் தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்துடன் இன்றைய போட்டிக்கு முன்பாக உடற்தகுதி சோதனையில் ஈடுபட்டார்.ரிக்கி பாண்டிங்நான் அவரை இழுத்து,…

`ஆவினில் வேலை’ ரூ.3கோடி மோசடி வழக்கு – ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் எப்போது?

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், முன்னாள் அமைச்சர்‌ ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட்டது. ராஜேந்திர பாலாஜிஇந்த உத்தரவுக்கு தடைவிதிக்கக்கோரி ராஜேந்திர பாலாஜி சார்பில் வழக்கறிஞர் ஏ.வேலன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள்…

ஹைதராபாத் அணியில் சமரன்! | smaran in srh squad ipl 2025

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த சுழற்பந்து வீச்சாளரான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆடம் ஸாம்பா காயம் காரணமாக எஞ்சியுள்ள போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இடதுகை பேட்ஸ்மேனான சமரன் ரவிச்சந்திரன் சேர்க்கப்பட்டுள்ளார். 21 வயதான சமரன் ரவிச்சந்திரன் இதுவரை 7 முதல் தர போட்டிகளிலும், 10 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் விளையாடி உள்ளார். உள்ளூர் போட்டிகளில் கர்நாடக அணிக்காக விளையாடி வருகிறார். சமரன் ரவிச்சந்திரன் ரூ.30 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நன்றி

தப்பியோடி வெளிநாடுகளில் பதுங்கிய 5 தொழிலதிபர்கள் – நாடு கடத்தும் முயற்சியில் விசாரணை அமைப்புகள்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டு வர இந்திய ஏஜென்சிகள் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன5 மணி நேரங்களுக்கு முன்னர்தப்பியோடிய வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி, சிபிஐயின் வேண்டுகோளின் பேரில், பெல்ஜியம் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை ஆல் இந்தியா ரேடியோ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி மற்றும் அவரது உறவினர் நீரவ் மோதி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.ஆனால்…

PBKS vs KKR: வாய்ப்பளித்த DRS; வாரிச்சுருட்டிய சஹல்; 33 ரன்களில் ஆட்டம் மாறிய கதை

ஐபிஎல் வரலாற்றிலேயே சாதனை ஆட்டமாக பஞ்சாப் vs கொல்கத்தா ஆட்டம் அமைந்திருக்குகிறது. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்தார். பஞ்சாப்பில் ஸ்டாய்னிஸ், யஷ் தாகூரை கழற்றிவிடப்பட்டு ஜோஷ் இங்கிலிஷ், சேவியர் பார்லெட் ஆகியோர் பிளெயிங் லெவனில் இடம்பிடித்தனர். கொல்கத்தா அணியில் ஒரேயொரு மாற்றமாக மொயின் அலிக்குப் பதில் வேகப்பந்துவீச்சாளர் ஆன்ரிச் நோர்க்கியா உள்ளே வந்தார்.ரஹானே – ஸ்ரேயாஸ் ஐயர்விக்கெட் வேட்டையைத் தொடங்கி வைத்த ஹர்ஷித்… முடித்துக்கொண்ட பஞ்சாப்!இந்த சீசனில் வெற்றிகரமான ஓப்பனிங்…

“முருகன் அனைவருக்கும் நல்ல சக்தியை வழங்க வேண்டும்” – குமரி கோயிலில் வேல் பூஜை செய்த சுரேஷ் கோபி!

கன்னியாகுமரி மாவட்டதில் உள்ள வேளிமலை குமாரகோயில் முருகன் திருத்தலம் தமிழகம் மற்றும் கேரள பக்தர்களிடையே பிரசித்தி பெற்றது. நவராத்திரி விழாவுக்காக இங்குள்ள முருகப்பெருமான் திருவனந்தபுரத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி தமிழகம் மற்றும் கேரளா ஆகிய இருமாநில அரசு விழாவாக கொண்டாடப்படும். பிரசித்தி பெற்ற வேளிமலை குமாரசுவாமி கோயிலுக்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு  துறை இணை அமைச்சரான நடிகர் சுரேஷ் கோபி இன்று சுவாமி தரிசனம் செய்தார். திருச்சூர் தொகுதியில் எம்.பி-யாக வெற்றிபெற்ற நிலையில் பல்வெறு வழிபாடுத்தலங்களில்…

மாஸ்டர் பிளாஸ்டர் விவ் ரிச்சர்ட்ஸின் அதிவேக சதம் | மறக்க முடியுமா? | Master Blaster Viv Richard fastest century | Can you forget it?

இன்றையக் காலக்கட்டத்தில் டி20 பேட்டிங் குறுகிய கால சூப்பர் ஸ்டார்களை உருவாக்கிக் காலி செய்து கொண்டிருக்கிறது. ஆனால், கிரிக்கெட் உலகின் என்றென்றைக்குமான சூப்பர் ஸ்டார் ஒருவர் உண்டெனில், அது விவ் ரிச்சர்ட்ஸ்தான். 1986-ம் ஆண்டு இன்றைய தினமான ஏப்ரல் 15-ம் தேதியன்று ஆண்டிகுவா மைதானம் ஓர் உலக சாதனையைக் கண்டது. விவ் ரிச்சர்ட்ஸ் என்னும் மேதை 56 பந்துகளில் சதம் கண்டு டெஸ்ட் கிரிக்கெட்டின் அதிவேக சதம் அடித்த உலகச் சாதனையை இங்கிலாந்து பந்து வீச்சை நார்…

சரியாக படிக்கவில்லை எனில் பள்ளியை விட்டு நீக்கலாமா? – கோவை பள்ளியில் நடந்தது என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப்படம்கட்டுரை தகவல்தங்கள் மகள் சரியாகப் படிக்கவில்லை என்றால் நாங்களே மாற்றுச்சான்றிதழை வாங்கிக் கொள்கிறோம் என்று கோவையிலுள்ள தனியார் பெண்கள் பள்ளியில் இரண்டாம் வகுப்பு குழந்தையின் பெற்றோரிடம் கட்டாயப்படுத்தி, 100 ரூபாய் முத்திரைத்தாளில் எழுதி வாங்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடுமையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில் வகுப்பு ஆசிரியரை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.பள்ளி நிர்வாகத்தின் ஒப்புதலின்றி இப்படி எழுதி வாங்கியிருக்க வாய்ப்பில்லை என்று…