காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகிய ஆயுஷ் மாத்ரே! |Ayush Mhatre Ruled Out of IPL Due to Injury!

Share

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் நூலிழையில் தோல்வியைச் சந்தித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இந்த சீசன் முழுக்கவே நல்ல பெர்பாமென்ஸைச் சிஎஸ்கே-வின் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், கடந்த போட்டியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்தத் தொடரில் இருந்து அவர் முழுமையாக விலகியுள்ளார்.

சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன்

கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின்போது, ஆயுஷ் மாத்ரேவுக்கு காயம் ஏற்பட்டது.

பேட்டிங்கில் இரண்டாவது ரன் எடுக்க முயன்றபோது அவருக்கு இடது காலில் தசைநார் கிழிவு ஏற்பட்டது. அதன் பின்னரும் அவர் தொடர்ந்து விளையாட முயன்று ஆட்டமிழந்தார்.

ஆயுஷ் மாத்ரேவின் காயத்தைப் பரிசோதித்த மருத்துவக் குழு, அவர் குணமடைய 6 முதல் 12 வாரங்கள் வரை ஆகும் எனத் தெரிவித்திருக்கிறது. இதனால், இந்த ஐபிஎல் சீசனின் மீதமுள்ள போட்டிகளில் அவர் விளையாட முடியாது என்பதை சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com