Browsing: விளையாட்டு

சாய் சுதர்சன் ஹிட்விக்கெட்; விமர்சித்த சேவாக்| Sai Sudharsan’s repeated hit-wicket dismisal Sehwag

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்தர் சேவாக், சாய் சுதர்சனை விமர்சித்திருக்கிறார்.”சாய் சுதர்சனுக்கு இனி ‘ஸ்டிராடஜிக் டைம்-அவுட்’ நேரத்தின் போது பேட்டில் தடவ பசை கொண்டு வர வேண்டும்.கையுறையில் பசையைத் தடவிக்கொண்டால் பேட் அவரது கையை விட்டு நழுவாது. ஒரே தவறை எப்படித் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் செய்ய முடியும்? சாய் சுதர்சன் ஹிட்விக்கெட்ஒரு வீரர் தனது தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும் என்று சொல்வார்கள், ஆனால் இவர் கற்கவில்லை. எனது நீண்டகால கிரிக்கெட்…

RCB: “இந்திய அணித் தேர்வு பத்தி நான் யோசிக்கல; என் கவனம் இதுல தான் இருக்கு.!”- கேப்டன் ரஜத் பட்டிதார்|Rajat patidar about indian team selection and ipl final

நடப்பு ஐபிஎல் சாம்பியனான பெங்களூரு அணியும், குஜராத் அணியும் இறுதிப் போட்டியில் இன்று (மே. 31) மோத இருக்கின்றன.போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கும் பெங்களூரு கேப்டன் ரஜத் பட்டிதார், “கடந்த வருடம் நாங்கள் கோப்பையை வென்றோம், ஆனால் இது ஒரு புதிய சீசன்.நாம் எப்போதும் கடந்த காலத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருக்க முடியாது. இந்த ஃபைனலுக்கு முன்பாக என்னால் என்ன சிறந்த பங்களிப்பைக் கொடுக்க முடியுமோ, அதில் மட்டுமே என் கவனம் இருக்கிறது. ஃபைனல் போட்டியில்…

‘சூர்யவன்ஷியின் போராட்டம் வீண்; தட்டித் தூக்கிய குஜராத் டைட்டன்ஸ்! – எப்படி வென்றது கில் & கோ? |Suryavanshi’s Lone Battle Not Enough as Gujarat Titans Register Comfortable Victory

கில் – சாய் சுதர்சன் கூட்டணி தான் ராஜஸ்தானின் இறுதிப்போட்டி கனவுக்கு இறுதி உரை எழுதியது. மொத்தம் 11 முறை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்துள்ளது இந்த இணை. இருவரில் ஒருவர் இருந்தாலும் ஆபத்து எனும் பட்சத்தில் இருவரையுமே செட்டில் ஆக ராஜஸ்தான் அனுமதித்து விட்டது. 14 ரன்களில் விடப்பட்ட சாய் சுதர்சனின் கேட்சும் போட்டியின் போக்கு குஜராத்துக்கு சாதகமாவதற்கு காரணமானது. பவர்பிளேயிலேயே 69 ரன்களையும், பத்து ஓவர்களிலேயே 127 ரன்களையும் எடுத்து ராஜஸ்தானுக்கான எல்லா வாயில்களையும்…

ரெக்கார்டுகளை நொறுக்கிய 15 வயது வைபவ்! | Vaibhav Suryavanshi IPL 2026 cricket records

டி20 கிரிக்கெட்டில் ஒரு தொடர் அல்லது டோர்னமென்டில் அதிக பவுண்டரிகள் (ஃபோர்கள் மற்றும் சிக்ஸர்கள்) அடித்த வீரர் என்ற உலக சாதனையும் இப்போது வைபவ் வசமாகியுள்ளது. இதற்கு முன்பு இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் 128 பவுண்டரிகளுடன் இந்த சாதனையை வைத்திருந்தார். குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 9 பவுண்டரிகள் தேவைப்பட்ட நிலையில், ஆட்டத்தின் 14-வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து 129 பவுண்டரிகளுடன் புதிய உலக சாதனை படைத்தார் இந்த இளம் வீரர்.ஏற்கனவே ஒரு சீசனில்…

'சூர்யவன்ஷி ஒரு நாள் எங்களுக்காக கோப்பையை ஜெயிச்சு கொடுப்பான்!' – ரியான் பராக் நம்பிக்கை

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (மே 29) குவாலிபையர் 2 போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த விறுவிறுப்பான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 214 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி, சுப்மன் கில்லின் அதிரடி சதத்தால் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.RR vs GTஇந்தத் தோல்விக்குப் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் தனது கருத்துகளைப் பகிர்ந்து…

‘அது அவர் கருத்து, எங்கள் நோக்கமல்ல!’ – சங்கக்காரா | Kumar Sangakkara refutes Riyan Parag comment IPL

கேப்டன் கருத்தும், பயிற்சியாளரின் மறுப்பும்!போட்டிக்குப் பிறகு பேசிய கேப்டன் ரியான் பராக், “எங்கள் அணியில் இளம் வீரர்கள் மற்றும் அனுபவமற்றவர்கள் அதிகம் இருப்பதால், நாங்கள் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவோம் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் சங்கக்காராவிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் முற்றிலும் மாறுபட்ட ஒரு பதிலை அளித்தார்.”இல்லை, ராஜஸ்தான் அணி அப்படிப்பட்ட நோக்கத்துடன் உருவாக்கப்படவில்லை. ஒருவேளை முன்பிருந்திருக்கலாம். ஆனால், 2022-ல் நாங்கள் ஒரு தெளிவான முடிவை எடுத்தோம். போட்டிகளை வென்று தரக்கூடிய,…

'சொந்த மைதானத்தில் ஆர்.சி.பியை எதிர்கொள்வதில் மகிழ்ச்சி!' – இறுதிப்போட்டி குறித்து கில்

ஐபிஎல் தொடரில் மூன்றாவது முறையாக குஜராத் அணி இறுதி போட்டியை எட்டியுள்ளது. நாளை (மே31)அகமதாபாத் மைதானத்தில் பெங்களூரு அணியை எதிர்கொள்ள உள்ளது.நேற்று நடந்த குவாலிஃபையர் 2 போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 214 ரன்கள் எடுத்தது. இதனை விரட்டி களமிறங்கிய குஜராத் அணி வீரர்கள் இந்த ஸ்கோரை 19வது ஓவரிலேயே எட்டி வெற்றி பெற்றனர். இதன் மூலம் தனது மூன்றாவது பைனலில் கால் பதித்துள்ளது குஜராத் அணி.கில்இந்த…

உலகக் கோப்பையின் மர்மப் பக்கங்கள்: திருட்டு, மீட்பு, சேதம்! | FIFA World Cup Trophy Mysterious History Theft

இரண்டாம் உலகப் போர், உலகையே உலுக்கிக் கொண்டிருந்த காலம். அப்போது FIFA-வின் துணைத் தலைவராக இருந்த இத்தாலியைச் சேர்ந்த ஒட்டோரினோ பராசி, ஒரு துணிச்சலான காரியத்தைச் செய்தார். ரோம் நகரில் உள்ள ஒரு வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த ஜூல்ஸ் ரிமெட் கோப்பையை, ஆக்கிரமிப்புப் படைகளின் கைகளில், குறிப்பாக ஹிட்லரின் கைகளில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக ரகசியமாக வெளியே எடுத்தார். பின்னர், அதை ஒரு சாதாரண ஷூ பாக்ஸில் வைத்து, தனது கட்டிலுக்கு அடியில் போர் முடியும்…

FIFA: கப்பல் பயணம், ஒற்றைக் கை கோல், துப்பாக்கியுடன் ரசிகர்கள்! முதல் உலகக் கோப்பையின் கதை தெரியுமா?

முதல் உலகக்கோப்பைFIFA World cup Diariesஇன்று உலகமே கொண்டாடும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் அத்தியாயம், பல ஆச்சரியங்களும், சுவாரஸ்யங்களும், ஏன்… அச்சமூட்டும் சம்பவங்களும் நிறைந்தது. நான்கு ஐரோப்பிய அணிகள் கப்பலில் பயணம் செய்து உருகுவேயை வந்தடைந்தது, இறுதிப் போட்டியில் இரு அணிகளும் தங்களது பந்தில்தான் விளையாட வேண்டும் என்று சண்டையிட்டது, துப்பாக்கிகளுடன் மைதானத்திற்குள் நுழைய முயன்ற ரசிகர்களைக் கண்டு நடுவர் அஞ்சியது, ஒற்றைக் கையுடன் விளையாடிய வீரர் கோல் அடித்தது என முதல்…

LSG: கேப்டன் பதவியில் இருந்து விலகிய ரிஷப்; லக்னோ அணி வெளியிட்ட அறிவிப்பு என்ன? | Rishabh Pant steps down as LSG captain

லக்னோ அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரிஷப் பண்ட் விலகி இருக்கிறார். இதனை அணி நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்தத் தொடரில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணி மொத்தம் 14 போட்டிகளில் விளையாடியது. இதில் 4 போட்டிகளில் மட்டுமே பெற்ற அந்த அணி, 10 போட்டிகளில் தோல்வியை தழுவியது. இதனால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் தொடரை விட்டு வெளியேறியது. ரிஷப் பண்ட்டின் பேட்டிங்கும் சிறப்பாக இல்லை. இதனால்…

1 2 3 455