ஊட்டி: ராணுவ வீரருக்கு வழங்கப்பட்ட சாம்பாரில் கிடந்த எலி – ஹோட்டலை மூட உத்தரவிட்ட அதிகாரி | ooty hotel controversy, officer took action
இதனால் அதிருப்தியடைந்த ஜெகன், சாம்பாரில் எலி கிடப்பதை வீடியோ எடுத்ததுடன், தனக்கு ஏற்பட்ட இந்தச் சம்பவம் குறித்த வீடியோவையும் உணவு பாதுகாப்புத்துறைக்கு புகாராக அனுப்பிவைத்திருக்கிறார். எழுத்துபூர்வமாக புகாரையும் அளித்திருக்கிறார்.இதனடிப்படையில் அம்மாஸ் கிச்சன் உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி, உடனடியாக அந்த ஹோட்டலை மூட உத்தரவிட்டிருக்கிறார்.இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர், “வாடிக்கையாளர் ஒருவருக்கு விநியோகிக்கப்பட்ட சாம்பாரில் எலிக்குஞ்சு கிடப்பதாக வந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட உணவகத்தில் ஆய்வுசெய்தேன். தற்காலிகமாக அந்த உணவகத்தை மூட…









