அடிக்கடி கட்சி மாறும் பண்ருட்டி ராமச்சந்திரனின் அறிவுரை எங்களுக்கு தேவையில்லை: எடப்பாடி பழனிசாமி பேச்சு
சென்னை: மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில், தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. செங்கல்பட்டு பழைய பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட செயலாளர்கள் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், சிட்லபாக்கம் ராஜேந்திரன் தலைமை வகித்தனர். இதில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: திமுக ஆட்சியில் மின்கட்டணம், சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவுக்கு பண்ருட்டி அறிவுரை கூறுகிறார். அவருக்கு அந்த தகுதி இல்லை. ஜெயலலிதாவை விமர்சனம்…









