Browsing: அரசியல்

சென்னையில் 6ம் தேதி மதிமுக ஆர்ப்பாட்டம்: தமிழ் உணர்வாளர்களுக்கு வைகோ அழைப்பு

சென்னை: இந்தி வெறிப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக சார்பில் சென்னையில் 6ம்தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் வைகோ அழைப்பு விடுத்துள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மதிமுக சார்பில், இந்தி எதிர்ப்புக் கண்டன ஆர்ப்பாட்டம் வரும் 6ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. அமித்ஷாவின் இந்தி வெறிப் பேச்சுக்கு, போக்குக்குக் கண்டனம் தெரிவிக்கவும், அரசமைப்புச் சட்டத்தின் 8வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும்…

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தடை: ஓபிஎஸ் தொடந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் இடைக்கால பொதுச்செயலாளராக உள்ள பழனிசாமியை கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கும் திட்டத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. Source link

கடந்த அதிமுக ஆட்சியின் போது எடப்பாடி பழனிசாமி கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியதற்கு ஆதாரம் உள்ளது: அமைச்சர் பி.மூர்த்தி அதிரடி

மதுரை: கடந்த அதிமுக ஆட்சியின்போது எடப்பாடி பழனிசாமி எத்தனை கோடி லஞ்சம் வாங்கினார் என்பதற்கு ஆதாரம் உள்ளது என மதுரையில் அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். மதுரையில், வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி நேற்று  நிருபர்களிடம் கூறியதாவது: எனது மகன் திருமணத்தில் ஏழை, எளிய மக்கள் சாதி சமுதாயத்துக்கு அப்பாற்பட்டு அனைவரும் சமமாக உட்கார்ந்து உணவு சாப்பிட்டனர். ஒரு இலைக்கு அதிகப்பட்சம் ரூ.300 வருமா? 50,000 பேருக்கு ஒன்றரை கோடி ரூபாய் வருமா? ஒரு…

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கார்கே, சசிதரூர், திரிபாதி போட்டி: கடைசி நாளில் வேட்புமனு தாக்கல்; விலகினார் திக் விஜய் சிங்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட மல்லிகார்ஜூனா கார்கே, சசிதரூர், கே.என். திரிபாதி ஆகியோர் கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனர். அசோக் கெலாட், திக்விஜய் சிங் ஆகியோர் போட்டியிலிருந்து விலகிக் கொண்டனர். காங்கிரஸ் தலைவர் தேர்தல் வரும் 17ம் தேதி நடக்க உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் 19ம் தேதி முடிவு அறிவிக்கப்பட உள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு கட்சித் தலைவரை தேர்வு செய்ய, ஜனநாயக முறைப்படி நடக்கும் இத்தேர்தலில் ராகுல் உட்பட…

சொல்லிட்டாங்க…

* குஜராத்தில் இப்போது தேர்தல் நடந்தால், பாஜவை ஆம் ஆத்மி வெற்றி பெறும் என உளவுத்துறை அரசுக்கு ரகசிய அறிக்கை தந்துள்ளது. புதுடெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்* உண்மையான காந்தி அடிகள் பிறந்த நாளில் போலி காந்திகள் குறித்து எதுவும் கூற விரும்பவில்லை. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை* பல்கலைக்கழகங்களிலும், பிற அரசுத் துறைகளிலும் அவுட்சோர்சிங் எனப்படும் குத்தகை முறையில் பணியாளர்களை நியமிக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். பாமக நிறுவனர் ராமதாஸ்* தொலைபேசியில் ஹலோ…

தமிழகத்தில் நடப்பது பெரியார், அண்ணா, கலைஞர் அரசு ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: துப்பாக்கிகளோடு திரியும் கும்பலான ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளிதத பேட்டி: ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழக அரசு தடை விதித்து இருப்பது சரி, அரசின் காரணங்களும் ஏற்புடையது. தடை விதித்து இருக்கின்ற காரணத்தை ஏற்பதாகவும் அதே நேரத்தில் விசிகவின்…

கழிவுநீர் தொட்டி இடிந்து விழுந்து விபத்து சிறுமிகள் உயிரிழப்புக்கு காரணமானோர் மீது நடவடிக்கை: விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: ‘கழிவுநீர் தொட்டி இடிந்து விழுந்து சிறுமிகள் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட பண்ணைப்புரம் பேரூராட்சி பெண்கள் சுகாதார வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டி இடிந்து விழுந்ததில் 7 வயது சிறுமி நிகிதா , 5 வயது சிறுமி சுப  ஆகிய இரண்டு குழந்தைகள் உயிரிழந்தார்கள் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும்…

அதிமுகவுடன் அமமுக இணையாது, நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம்: டி.டி.வி.தினகரன் பேச்சு

தஞ்சை: அதிமுகவுடன் அமமுக இணையாது, நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம், இணையவேண்டிய அவசியம் இல்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் சட்ட ரீதியாக போராடி வருகிறார். அவரின் கருத்தும் எனது கருத்தும் ஒன்றுதான், சொந்த கட்சிக்காரர்களையே விலைக்கு வாங்கும் அளவில் அதிமுக தவறான பாதையில் பயணிக்கிறது என செய்தியாளர் சந்திப்பில் டி.டி.வி.தினகரன் பேசினார். Source link

முதியோர் தினம் ஜி.கே.வாசன் வாழ்த்து – Dinakaran

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: வீடும், நாடும், சமூகமும் உயர்வடைய தன் வாழ்நாள் முழுவதும் உழைத்து ஓய்வெடுக்கும் முதியோர்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலே, அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலே, வருடந்தோறும் அக். 1ம் தேதி உலக முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது. தான் கற்காத கல்வியையும், அடையாத பதவியையும், சமூகத்தில் அடையாத உயரத்தையும் தன் சந்ததிகள், பெற வேண்டும் என்று தன் வாழ்நாள் முழுவதும் உழைத்து, தன் சுய தேவைகளையும், ஆசைகளையும் துறந்து பாடுப்பட்ட முதியோர்களின்…

சொல்லிட்டாங்க…

* காங்கிரஸ் அரசு ஐந்தாண்டுகளை நிறைவு செய்யக்கூடாது என்பதற்கான நடவடிக்கைகளை பாஜ முயற்சித்து வருகின்றது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்* பிச்சை எடுக்கும் ஓய்வு பெற்ற முதியவர் கோபாலுக்கு ஓய்வூதிய தொகையை அரசு உடனடியாக அளிக்க வேண்டும். தேமுதிக தலைவர் விஜயகாந்த்* கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு கிடைக்க வேண்டும். அவர்களின் உரிமையை பிரதமரான நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி* ஆன்லைன் தடை சட்டத்தை நடைமுறைபடுத்த ஆளுநர் உடனடியாக கையெழுத்திட வேண்டும்.…

1 85 86 87 88 89 161