சென்னையில் 6ம் தேதி மதிமுக ஆர்ப்பாட்டம்: தமிழ் உணர்வாளர்களுக்கு வைகோ அழைப்பு
சென்னை: இந்தி வெறிப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக சார்பில் சென்னையில் 6ம்தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் வைகோ அழைப்பு விடுத்துள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மதிமுக சார்பில், இந்தி எதிர்ப்புக் கண்டன ஆர்ப்பாட்டம் வரும் 6ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. அமித்ஷாவின் இந்தி வெறிப் பேச்சுக்கு, போக்குக்குக் கண்டனம் தெரிவிக்கவும், அரசமைப்புச் சட்டத்தின் 8வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும்…









