Browsing: அரசியல்

சொல்லிட்டாங்க…

சமூகநீதி கொள்கையின் அடிப்படையை மடைமாற்றும் திருகுவேலையை இடஒதுக்கீடு அளவுகோலாக மாற்றக்கூடாது என்பதுதான் எங்களது வேண்டுகோள். – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்கடந்த 22 வருடங்களாக என்னை சபித்து வருகிறார்கள். அந்த சாபம் என்னை மேலும் பலப்படுத்துகிறது. – பிரதமர் மோடிஒன்றிய அரசு, பிரதமர் மோடியுடன் உள்ள தொடர்பு மாநில வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு கட்சி மற்றும் அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு. – ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்மோடிஜியின் ரோட் ஷோக்கள் கூட்டத்தை ஈர்க்கவில்லை என நான் கேள்விப்பட்டேன். ரோட்…

பாஜக மாநில நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை

சென்னை, கமலாலயத்தில் பாஜக மாநில நிர்வாகிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல், தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. Source link

பிரதமர் மோடி திண்டுக்கல் வந்து சென்றது மகிழ்ச்சியான தருணம்: அண்ணாமலை பேட்டி

சென்னை: தமிழக மக்களின் அன்புக்குள்ளாகி இருக்கிறார் பிரதமர் மோடி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கொட்டும் மழையிலும் பெண்கள் கைக்குழந்தையுடன் காண வந்தது பிரதமரை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா வருகை ஊக்கமளிக்கிறது. தலைவர்களை உற்சாகமூட்டிவிட்டு சென்றுருக்கிறார் அமித்ஷா. பிரதமர் மோடி திண்டுக்கல் வந்து சென்றது மகிழ்ச்சியான தருணம் என்றும் தெரிவித்துள்ளார்.  Source link

பட்டாசு விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே அழகுசிறை கிராமத்தில் வாண வெடி தயாரிக்கும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர், 12க்கும் மேற்பட்டோர் படுகாயங்கள் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பட்டாசு ஆலைகளில் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பை முறையாக மேற்கொள்வதில்லை. அரசு அதிகாரிகள் இப்பணிகளை முறையாக மேற்கொள்ளாமலும், பட்டாசு உரிமையாளர்களுக்கு ஆதரவாக கண்டும், காணாமலும்…

மதுரை விமானநிலையத்தில் வரவேற்பு ஓ.பி.எஸ்சுக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம்: எடப்பாடி கடுப்பு

மதுரை: காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு வந்த பிரதமர் மோடி மதுரை விமானநிலைய வரவேற்பின்போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு முக்கியத்துவம் அளித்ததால், எடப்பாடி பழனிசாமி கடுப்பானார். திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நேற்று மாலை நடந்தது. இதில் பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க, பிரதமர் மோடி பெங்களூரிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு நேற்று பிற்பகல் 2.40 மணியளவில் வந்தடைந்தார்.…

மதம், மொழி, இனத்தின் பெயரை சொல்லி அரசியல் ஆதாயம் அடைய பார்ப்பதா? பாஜவுக்கு முஸ்லிம் லீக் கடும் கண்டனம்

சென்னை: தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா நேற்று வெளியிட்ட அறிக்கை: மதம் மாறிய தலித்களுக்கும் தாழ்த்தப்பட்டோர் அந்தஸ்து வழங்க உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் ஒன்றிய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதில், நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இந்து சமுதாயத்தில் இருந்த அடக்குமுறை சூழல், கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய சமுதாயத்திலும் இருந்தது என்பதற்கு ஆதாரப்பூர்வமான தகவல்கள் இல்லை. ஆகவே, மதம் மாறிய தலித்களுக்கு தாழ்த்தப்பட்டோர் அந்தஸ்து வழங்குவது அவசியம்…

பிரதமர் மோடியுடன் இ.பி.எஸ், ஓ.பி.எஸ். தனித்தனியே எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என தகவல்!

மதுரை: மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடமோ அல்லது ஓபிஎஸ் தரப்பிடமோ எந்த பேச்சுவார்த்தையும் பிரதமர் மோடி நடத்தவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வழியனுப்பி வைத்துவிட்டு திரும்பியுள்ளனர். Source link

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சென்னைக்கு இயற்கை கொடுத்த கொடை; மாற்றங்களை ஏற்படுத்தினால் அது சுற்றுசூழலை பாதிக்கும்: அன்புமணி இராமதாஸ் அறிக்கை

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் அமைந்துள்ள சதுப்பு நிலம் சென்னைக்கு இயற்கை கொடுத்த  கொடை என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார். பள்ளிக்கரணை சதுப்பு நிலம் கடல் மட்டத்தை விட கீழாக இருக்கிறது. அதில் கால்வாய் அமைத்தாலோ, தூர் வாரினாலோ அதன் மட்டம் மேலும் குறைந்து விடும். அதனால் கடல் நீர் சதுப்பு நிலத்திற்குள் நுழைந்து விடும் ஆபத்து உள்ளது என அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: சென்னை பள்ளிக்கரணை பகுதியில்…

ஒன்றிய அரசுக்கு வைகோ வலியுறுத்தல் இடஒதுக்கீடு பயன் முழுமைபெற ஓபிசி கணக்கெடுப்பு அவசியம்

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர்வைகோ வெளியிட்ட அறிக்கை: 1931ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது எடுக்கப்பட்ட சாதிவாரி புள்ளிவிபரங்கள் அடிப்படையில் அந்த இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. விடுதலைபெற்ற இந்தியாவில், இதர பிற்படுத்தப்பட்டோர் பற்றிய கணக்கெடுப்பு நடத்தவில்லை. இந்நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, இதர பிற்படுத்தப்பட்டோர் விபரங்கள் எடுக்க வேண்டும் என்று கோரி அகில இந்திய ஓ.பி.சி. ஒருங்கிணைப்புக் குழு அளித்த மனுவை பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்…

மதுரை விமான நிலையத்தில் மோடியுடன் இபிஎஸ் – ஓபிஎஸ் இன்று சந்திப்பு: தனித்தனியாக பேச அனுமதி

மதுரை: காந்திகிராம பல்கலை பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தரும் பிரதமர் மோடியை, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் மதுரையில் தனித்தனியாக சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திண்டுக்கல் அருகே காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று மாலை நடக்கிறது. இதில் பங்கேற்க வரும் பிரதமர் மோடியை, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் மதுரை விமானநிலையத்தில் அடுத்தடுத்து சந்திக்க இருக்கின்றனர். ஏற்கனவே இவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதைத்தொடர்ந்து, 12ம் தேதி சென்னை வரும் அமித்ஷாவை, எடப்பாடி…

1 66 67 68 69 70 161