Browsing: அரசியல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில் திடீர் திருப்பம்; ஓபிஎஸ் வேட்பாளர் திடீர் வாபஸ்: பாஜ மிரட்டலுக்கு பணிந்து எடப்பாடி வேட்பாளருக்கு ஆதரவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் பாஜ கொடுத்த திடீர் எச்சரிக்கை காரணமாக தனது வேட்பாளரை வாபஸ் பெறுவதாக  அதிமுக ஓபிஎஸ் அணி இன்று அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அதில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் தென்னரசு, ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் செந்தில்முருகன் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். செந்தில்முருகன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். தென்னரசு நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய இருந்த நிலையில் வேட்பு…

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு நிவாரணம்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மயிலாடுதுறை மாவட்டத்தில் இருபதாயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது, உளுந்து, பயறு போன்றவற்றை சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை பகுதிகளில் நெல் மற்றும் கடலை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக வயல்களில் தேங்கி அறுவடை செய்ய முடியாத நிலையில், பாதிக்கப்பட்ட நெற் பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும். Source…

தமிழகத்தை 14 ஆண்டுகளாக ரயில்வே புறக்கணிப்பு: ராமதாஸ் சாடல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் 6 புதிய பாதை திட்டங்களுக்கு ரூ.1,158 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பது தான் மகிழ்ச்சியளிக்கும் செய்தி ஆகும். இவற்றில் ராமேஸ்வரம் – தனுஷ்கோடி திட்டம் தவிர மீதமுள்ள 5 திட்டங்களுக்கும் கடந்த பத்தாண்டுகளில் சொல்லிக் கொள்ளும்படியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. சென்னை-மாமல்லபுரம்-கடலூர், அத்திப்பட்டு-புத்தூர், திருப்பெரும்புதூர்- கூடுவாஞ்சேரி ஆகிய 3 முக்கிய தொடர்வண்டிப்பாதை திட்டங்களுக்கு இந்த நிதிநிலை அறிக்கையிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது ஏமாற்றமளிக்கிறது. சென்னை-மாமல்லபுரம்-கடலூர் பாதை கிழக்குக் கடற்கரை…

அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை மீண்டும் வழங்க நடவடிக்கை: ஈரோட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் திண்ணை பிரசாரம்

ஈரோடு: அ.தி.மு.க. ஆட்சியில் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்ட 7.50 லட்சம் பேருக்கு மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருங்கல்பாளையம் பகுதிகளில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் இன்று வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரசாரம்…

அதிமுக அமைப்பு செயலாளராக செந்தில் முருகன் நியமனம்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: அதிமுக அமைப்புச் செயலாளராக செந்தில் முருகனை நியமித்து ஓபிஎஸ் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அதில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் தென்னரசு, ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் செந்தில்முருகன் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். செந்தில்முருகன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். தென்னரசு நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய இருந்த நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்வது திடீரென ஒத்தி வைக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் இபிஎஸ், ஓபிஎஸ்…

அண்ணாமலைக்கு பதில் சொல்ல விரும்பவில்லை: மனு தாக்கலுக்கு பின் ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று தனது தேர்தல் நடத்தும் அலுவலரான சிவகுமாரிடம், தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது, எம்பிக்கள் கணேசமூர்த்தி, அந்தியூர்  செல்வராஜ், காங்கிரஸ் சட்டப்பேரவைக்குழு தலைவர் செல்வ பெருந்தகை, முன்னாள்  எம்எல்ஏ சந்திரகுமார் ஆகியோர் உடனிருந்தனர். இதைத்தொடர்ந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தலில் தனிப்பட்ட மனிதர் வெற்றி அடைவதைவிட மதச்சார்பற்ற சக்திகளின் வேட்பாளர் வெற்றி பெற விரும்புகிறேன். என் மகன் திருமகன்…

இபிஎஸ் போல் பாஜவை தவிர்த்த ஓபிஎஸ்‘தேசிய ஜனநாய கூட்டணி’ என பேனர்: மானத்தை வாங்குறாங்களே என்று குமுறும் நிர்வாகிகள், தொண்டர்கள்

அதிமுக ஓபிஎஸ் அணியில் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக செந்தில்  முருகன் நிறுத்தப்பட்டுள்ளார். இதையடுத்து, நேற்று முனிசிபல் காலனியில்  தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது. பணிமனையில் வைப்பதற்காக  நேற்று முன்தினம் இரவு பிளக்ஸ் பேனர் தயார் செய்யப்பட்டது. அந்த பேனரில்  எம்ஜிஆர், ஜெயலலிதா, பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களான  ஜான்பாண்டியன், ஏசி. சண்முகம், தனியரசு ஆகியோர் படம் இடம் பெற்றிருந்தது.  ஆனால் பாஜ தலைவர்களான பிரதமர் மோடி, தேசிய தலைவர்  ஜே.பி. நட்டா, மாநில …

ஓபிஎஸ் அணி, அமமுக வேட்பாளர் உட்பட 16 பேர் வேட்பு மனு தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 31ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் வரை 20 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், நேற்று திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சிவபிரசாந்த், அமமுக மாற்று வேட்பாளர் விசாலாட்சி, அதிமுக ஓபிஎஸ் அணி செந்தில்முருகன், இந்திய சுயராஜ்ய கட்சி ராம்குமார், சுயேட்சைகள்…

ஓபிஎஸ், சசிகலா சந்திப்பு? அதிமுக ஒன்றிணைவதற்கான காலம் நெருங்கி வருகிறது: சசிகலா பரபரப்பு பேட்டி

சென்னை: அதிமுக ஒன்றிணைவதற்கான காலம் நெருங்கி வருகிறது என சசிகலா தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ம் தேதி நடைபெற உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் தென்னரசு, ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் செந்தில்முருகன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனால், ‘இரட்டை இலை’ சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பேரறிஞர் அண்ணாவின் 54ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி செலுத்தினார். பின்னர்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: ஓபிஎஸ் அணி வேட்பாளர், வேட்பு மனுவுடன் இரட்டை இலை சின்னம் கேட்டு மனு..!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் ஓபிஎஸ் அணி அதிமுக வேட்பாளர் செந்தில் முருகன் இரட்டை இலை சின்னம் கேட்டு வேட்பு மனு தாக்கல் செய்தார். தன்னை அதிமுக வேட்பாளர் என்று குறிப்பிட்டு வேட்பு மனுவுடன் இரட்டை இலை சின்னத்தையும் கோரி செந்தில் முருகன் மனு தாக்கல் செய்தார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவின் ஓபிஎஸ் அணி சார்பில் செந்தில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் சற்று நேரத்துக்கு முன்பு தனது வேட்பு மனுவை தேர்தல்…

1 26 27 28 29 30 161