கோவையில் பயன்பாட்டிலேயே இல்லாத இருசக்கர வாகனத்திற்கு 7 ஆண்டுகளாக ரூ.3.5 லட்சம் அபராதம் விழுந்தது எப்படி?

Share

போக்குவரத்து காவலர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

கோவையில் பயன்பாட்டில் இல்லாத இரு சக்கர வாகனத்துக்கு பரிவாஹன் இணையதளத்தில் 249 முறை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரே வாகனத்துக்கு, போக்குவரத்து விதிமீறலுக்காக சுமார் ரூ.3.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் பதிவாகியுள்ளது. இதனால் போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் விதிப்பதில் முறைகேடு நடந்துள்ளதா அல்லது தொழில்நுட்பத் தவறா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருக்கலாம் என்பதால், இந்த நடைமுறையை வடிவமைத்துத் தந்துள்ள தேசிய தகவல் மையத்திடம் புகார் அனுப்பப்பட்டிருப்பதாகவும், அதற்கு இன்னும் பதில் வரவில்லை என்றும் பிபிசியிடம் பேசிய கோவை மாநகர காவல் (போக்குவரத்து) துணை ஆணையர் மகேஸ்வரன் தெரிவித்தார்.

ஒரே வாகனத்துக்கு 7 ஆண்டுகளில் சுமார் ரூ.3.5 லட்சம் அபராதம்!

போக்குவரத்து காவலர்கள் வாகனங்களை ஆய்வுக்கு உட்படுத்துகின்றனர். (கோப்புப்படம்)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, போக்குவரத்து காவலர்கள் வாகனங்களை ஆய்வுக்கு உட்படுத்துகின்றனர். (கோப்புப்படம்)

கோவை மாநகர காவல்துறைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து விதிமீறலுக்காக பல்வேறு இடங்களிலும், போக்குவரத்து காவல்துறையினர் ஆய்வுகளை மேற்கொள்கின்றனர்.

அப்போது ஹெல்மெட் அணியாமல் வருவது, சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுவது, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, ஒரு வழிப்பாதையில் வாகனத்தில் வருவது, டூ வீலரில் 3 பேர் பயணிப்பது, அதிவேகத்தில் வாகனத்தை இயக்குவது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களுக்காக வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கின்றனர்.

அதேபோன்று ரோந்துப்பணியின் போதும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளைக் கண்டறிந்து அபராத சலான்களை அனுப்புகின்றனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com