புதுவையில் கோடிக்கணக்கில் கனிமவள கொள்ளை நடக்கிறது: முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
புதுச்சேரி: புதுவையில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு கனிமவள கொள்ளை நடக்கிறது என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். புதுவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று அளித்த பேட்டி: புதுச்சேரிக்கும் அதானிக்கும் கூட தொடர்பு இருக்கிறது. காரைக்கால் துறைமுக நிறுவனம் கடனாக வாங்கிய பணத்தை கட்டாதததால் ஏலத்துக்கு வந்தது. அதனை வாங்குவதற்கு அதானி முயற்சி செய்தார். அதானி நேரடியாக வாங்காமல், சக்திவேல் என்ற பினாமி மூலம் வாங்கியுள்ளார்.அதன்பிறகு அதானி குடும்ப பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது. எல்லா ஊழலும்…









