Browsing: அரசியல்

பெண்கள் உடன்கட்டை ஏறுவதை பாஜக உறுப்பினர் பெருமிதமாக பேசுவது வெட்கப்படவைக்கும் செயல் : எம்.பி. கனிமொழி விளாசல்!!

டெல்லி : பெண்கள் உடன்கட்டை ஏறுவதை பெருமிதமாக பேசிய பாஜக உறுப்பினருக்கு மக்களவை எம்.பி. கனிமொழி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, ‘தமிழகம், கேரளா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் ஆளுநர்கள் அரசுக்கு எதிராக செயல்படுகின்றனர். தமிழகத்தில் தேர்தல் ஏதும் இல்லை என்பதால் ஜனாதிபதி உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டவில்லை. தமிழக ஆளுநர் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளனர்.எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் அரசுடன் மோதல் போக்கை கையாளுகின்றனர்.ஆளுநர்களுக்கு…

ஓசூர் அடுத்த சானமாவு வனப்பகுதியில் 60-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நடமாட்டம்

ஓசூர் அடுத்த சானமாவு வனப்பகுதியில் 60-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் பல குழுக்களாக பிரிந்து நடமாட்டம். சானமாவு பகுதியில் முகாமிட்டுள்ள 4 ஒற்றை யானைகள் ஓசூர் அருகே பென்னிகல், டி.கொத்தப்பள்ளியில் பயிர்களை சேதப்படுத்தின. தனியாக சுற்றித் திரியும் 2 காட்டு யானைகளை வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டினர். Source link

வாயில் வடை சுடும் ஒன்றிய அரசு தேர்தலின் போது மட்டும் மக்களை தேடும் அதிமுக: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

மதுரை: தேர்தலின்போது மட்டும் மக்களை அதிமுக தேடும். ஒன்றிய அரசு வாயில் வடை சுடுகிறது’ என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். மதுரை, பாண்டிகோவில் கலைஞர் அரங்கில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 70 ஆயிரம் பெண்களுக்கு ரூ.173 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாலை நடந்தது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: கிட்டத்தட்ட 75 சதவீத தேர்தல் வாக்குறுதிகள்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி அணிக்கு இரட்டை இலை சின்னம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கேட்டு எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்திருந்த இடைக்கால மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் வேட்பாளரை அதிமுக கட்சியின் பொதுக்குழுவே முடிவு செய்யும். அதனை இறுதி செய்து அக்கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்தல் ஆணையத்தில் முடிவை தெரிவிப்பார்’…

10ம் தேதி நெல்லைக்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு: அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் பேட்டி

நெல்லை: நெல்லைக்கு வரும் 10ம் தேதி வரும் முன்னாள் முதல்வரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு கங்கைகொண்டானில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதுகுறித்து அதிமுக அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அதிமுக வலுவாகவே உள்ளது. அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் 95 சதவீதம் பேர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர். நெல்லை, தென்காசி மாவட்டத்தில் பல தொகுதிகளில் குக்கர் சின்னத்தால் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பறிபோனது.…

ஈரோடு கிழக்கில் அதிமுகவின் தோல்வி நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்: பாலகிருஷ்ணன் பேட்டி

குடியாத்தம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குடியாத்தத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் இளங்கோவன் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். எதிரணியாக உள்ள பாஜ, அதிமுகவுக்குள் ஏற்பட்ட குழப்பம் இன்னும் தீரவில்லை. வேட்பாளரை எப்போது தேர்ந்தெடுத்து அறிவிப்பார்கள் என்பதும், வேட்புமனு தாக்கல் செய்வார்களா? என்பதிலும் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் வேட்பாளர் அறிவிப்பது, தேர்தல் சின்னம் பெறுவதில் குழப்பத்தில் உள்ளனர். மத்திய நிதி…

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உட்பட 100 பேர் மீது வழக்கு

நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா போட்டியிடுகிறார். இவர், நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக  ஈரோடு சூரம்பட்டி பூசாரி சென்னிமலை வீதியில் இருந்து கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக ஈரோடு மாநகராட்சி அலுவலகம் நோக்கி வந்து கொண்டிருந்தார். ஈரோடு அரசு மருத்துவமனை அருகே வந்தபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி ஊர்வலத்துக்கு அனுமதி கிடையாது என்று கூறினர். இருப்பினும், அதையும் மீறி நாம் தமிழர் கட்சியினர் கைகளில் கரும்புகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். இதனால், ஈரோடு அரசு…

அதிமுகவுக்கு ஏற்பட்ட பிணி ஜெயக்குமார்: கு.ப.கிருஷ்ணன் ஒரே போடு

ஈரோடு முனிசிபல் காலனியில் அதிமுக ஓபிஎஸ் அணியின் தேர்தல் பணி மனை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதை ஓபிஎஸ் அணியின் கழக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கு.ப.கிருஷ்ணன் திறந்து வைத்தார். பின்னர்  அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாங்கள் அமைத்திருப்பது தேசிய ஜனநாயக கூட்டணி. இபிஎஸ் அணியினர் அமைத்துள்ளது முற்போக்கு கூட்டணி. அதிமுகவுக்கு ஏற்பட்ட பிணியே (நோய்) முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்தான். எங்கள் பக்கம் 99 சதவீத தொண்டர்கள் உள்ளனர். அதை முன்னாள் அமைச்சர்…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தென்னரசுவை ஆதரிப்பதா, வேண்டாமா என்பது பற்றி ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் தீவிர ஆலோசனை

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தென்னரசுவை ஆதரிப்பதா, வேண்டாமா என்பது பற்றி ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் நடைபெறும் ஆலோசனையில் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் ஜே.சி.டி. பிரபாகரன், மனோஜ் பாண்டியன் ஆகியோர்  ஓ.பன்னீர்செல்வம் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தென்னரசுவை அதிமுக வேட்பாளராக நிறுத்த ஒப்புதல் கேட்டு அவைத் தலைவர் கடிதம் அனுப்பியுள்ளதாக ஜெயக்குமார் தகவல் அளித்துள்ளார். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இருதுருவங்களாக செயல்பட்டு வருகின்றனர்.…

அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் எழுதியுள்ள கடிதத்தில் ஓபிஎஸ் வேட்பாளர் பெயர் இல்லாதது தவறு: பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் பேட்டி

சென்னை: அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் எழுதியுள்ள கடிதத்தில் ஓபிஎஸ் வேட்பாளர்பெயர் இல்லாதது தவறு என ஓபிஎஸ் உடனான ஆலோசனைக்கு பின் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் பேட்டியளித்துள்ளனர். பொதுக்குழு தான் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டுமே தவிர முன்கூட்டியே அவைத்தலைவர் முடிவு செய்தது தவறு என வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். Source link

1 25 26 27 28 29 161