Browsing: அரசியல்

புதுவையில் கோடிக்கணக்கில் கனிமவள கொள்ளை நடக்கிறது: முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி: புதுவையில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு கனிமவள கொள்ளை நடக்கிறது என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். புதுவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று அளித்த பேட்டி: புதுச்சேரிக்கும் அதானிக்கும் கூட தொடர்பு இருக்கிறது. காரைக்கால் துறைமுக நிறுவனம் கடனாக வாங்கிய பணத்தை கட்டாதததால் ஏலத்துக்கு வந்தது. அதனை வாங்குவதற்கு அதானி முயற்சி செய்தார். அதானி நேரடியாக வாங்காமல், சக்திவேல் என்ற பினாமி மூலம் வாங்கியுள்ளார்.அதன்பிறகு அதானி குடும்ப பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது. எல்லா ஊழலும்…

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணிக்கு மண்பாண்ட தொழிலாளர்கள் ஆதரவு

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில், திமுக கூட்டணி கட்சிக்கு மண்பாண்ட தொழிலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் (குலாலர்) சங்க மாநில தலைவர் சேம.நாராயணன் எழுதியுள்ள கடிதம்: ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில், திமுக கூட்டணி கட்சிக்கு தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் குலாலர் சங்கம் முழு ஆதரவை அளிக்கும். மேலும், இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து, தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் குலாலர் சங்கம் சார்பாக…

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் செல்வாக்கை நிரூபிக்க முடியாமல் தடுமாறும் எடப்பாடி அணி: தேர்தல் பிரசாரம் செய்யாமல் வேடிக்கை பார்க்க ஓபிஎஸ் முடிவு

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியினர் பிரசாரம் செய்யாமல் வேடிக்கை பார்க்க முடிவு செய்துள்ளனர். இதன்மூலம் எடப்பாடி அணியினர் தங்களது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திலும், தடுமாற்றத்திலும் உள்ளனர்.ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 4ம் தேதி காலமானார். இதையடுத்து வருகிற 27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இங்கு திமுக கூட்டணி…

அதானி குழுமத்திற்கு வங்கிகள் எதன் அடிப்படையில் கடன் கொடுத்தன?.. காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கேள்வி..!

ஈரோடு: அதானி குழுமத்திற்கு வங்கிகள் எதன் அடிப்படையில் கடன் கொடுத்தன? என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி, தேமுதிக வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் பெரும் குழப்பங்களுக்கு இடையே அதிமுகவின் வேட்பாளராக தென்னரசு களமிறங்கி உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல், வரும் 27ம்…

ஒடிசா முன்னாள் தலைமை செயலாளர் காங்கிரசில் சேர்ந்தார்

புவனேஷ்வர்:  ஒடிசா தலைமை செயலாளர் பதவியில் இருந்து கடந்த 2013ம் ஆண்டு ஓய்வு பெற்றவர் பிஜய் குமார் பட்நாயக். இவர் நேற்று அகில இந்திய காங்கிரஸ் பொதுசெயலாளர் கே.சி.வேணுகோபால், ஒடிசா காங்கிரஸ் பொறுப்பாளர் ஏ.செல்லக்குமார், ஒடிசா மாநில காங்கிரஸ் தலைவர் சரத் பட்நாயக் ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் நேற்று தன்னை இணைத்து கொண்டார். அப்போது பேசிய பிஜய் குமார் பட்நாயக், “ஒடிசாவின் மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து மீண்டும் ஜனநாயகத்தை மீட்க பாடுபடுவேன்”…

சொல்லிட்டாங்க…

* மாத சம்பளம் அல்லது வர்த்தகம் மூலமாக சம்பாதித்தாலும் ஒன்றிய அரசின் பட்ஜெட் நடுத்தர குடும்ப மக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. – பிரதமர் மோடி* பிரதமர் தன்னைத்தானே புகழ்ந்து பேசுகிறார். அவரால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும் என பேசுவது ஆணவம் மிக்கது. – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே* ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவு வரும்போது தேமுதிகவின் பலம் என்னவென்பது தெரிய வரும். – தேமுதிக பொருளாளர் பிரேமலதா* ஒன்றிய அரசின் விளக்கத்திற்கு பிறகும்,…

ஈரோடு கிழக்கு தொகுதியில் 5 நாட்கள் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் 5 நாட்கள் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். பிப்.15,16,17,24,25 ஆகிய தினங்களில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பழனிசாமி தேர்தல் பரப்புரை சுற்று பயணம் மேற்கொள்கிறார். ஈரோடு கிழக்கில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து பழனிசாமி பரப்புரை செய்கிறார். Source link

அவசியமில்லாமல் மக்கள் மனுக்களுடன் மாநில தலைநகருக்கு படையெடுக்கும் சூழலை தவிர்க்க வேண்டும் : மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு!!

சென்னை : புதிதாக பொறுப்பேற்றிருக்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கு, தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் அனுப்பியுள்ளார், அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, அன்பார்ந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களே, புதிதாக பொறுப்பேற்றிருக்கும் உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய ஆட்சிப் பணியில் பலரும் இணைவதற்கு ஆட்சித் தலைவர் பணியே அச்சாரமாக அமைந்திருக்கிறது. அதுவே பலரையும் இப்பணிக்கு ஈர்க்கும் உந்து சக்தியாகவும் விளங்குகிறது. இப்பணியில் நீங்கள் ஆற்றும் அரும்பணிகளையே வாழ்நாள் முழுவதும் அசைபோட்டு மகிழ்ச்சியடைவீர்கள் என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன்.…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காங். நட்சத்திர பேச்சாளர் பட்டியல் வெளியீடு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஒவ்வொரு கட்சியிலிருந்து பிரசாரத்தில் ஈடுபட உள்ள நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியல் அந்தந்த அரசியல் கட்சிகள் சார்பில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலரிடம் அளிக்கப்பட்டு அதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கி வருகிறது. அதன்படி தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்ய 34 பேர் கொண்ட நட்சத்திர பேச்சாளர் பட்டியலை தேர்தல் ஆணையத்துக்கு அளித்திருந்தது. அந்த பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ்…

ஈரோடு தேர்தலில் டெபாசிட் வாங்க முடியாவிட்டால் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை ஓபிஎஸ்சிடம் ஒப்படைக்க வேண்டும்: பெங்களூரு புகழேந்தி பரபரப்பு பேச்சு

சென்னை: சென்னைகாவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி நேற்று புகார் மனு ஒன்று அளித்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சமூக வலைத்தளங்களில் என்னைப்பற்றி அவதூறு பரப்புகின்றனர். எனக்கு அடிக்கடி அழைப்பு செய்து மிரட்டல் விடுக்கப்படுகிறது. இறுதியாக புகழேந்தி இறந்து விட்டார் என புகைப்படத்துடன் செய்தியை பரப்ப தொடங்கியுள்ளனர். இது எனது குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படி புகைப்படத்தை வெளியிட்ட நபர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் அவரது…

1 23 24 25 26 27 161