Browsing: அரசியல்

தொண்டரை பட்டு… பட்டென அடித்த சீமான்

நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மேனகாவை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 2 நாட்களுக்கு முன் ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். 16ம் நம்பர் ரோடு, தெப்பக்குளம் வீதியில் சீமானின் பிரசார வாகனம் சென்றபோது, காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் வீதி வீதியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென திமுகவினர் மீது நாம் தமிழர் கட்சியினர் கல்வீசி தாக்கினர். தடுக்க வந்த போலீசாரையும் தாக்கினர். இதில்…

நாங்கள் ஏன் தனிக்கட்சி தொடங்க வேண்டும்?.. மக்களிடம் சென்று நீதி கேட்போம்: ஓ.பன்னீர் செல்வம் பேட்டி

சென்னை: நாங்கள் ஏன் தனிக்கட்சி தொடங்க வேண்டும்?..  மாவட்ட வாரியாக மக்களை சந்தித்து நீதி கேட்கும் பணியை விரைவில் தொடங்குவோம் என ஓ.பன்னீர் செல்வம் கூறினார். அதிமுக என்பது எடப்பாடி பழனிச்சாமியின் தாத்தா ஆரம்பித்த கட்சி அல்ல, ஆணவத்தின் உச்சத்தில் பழனிச்சாமி இருக்கிறார். ஆணவத்தை அடக்கும் சக்தி அதிமுக தொடர்களுக்கு உண்டு என ஓபிஎஸ் கூறினார். Source link

ஈரோடு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 27ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என அறிவிப்பு

ஈரோடு: ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 27.02.2023 (திங்கட்கிழமை) அன்று காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறும். 25.02.2023 அன்று மாலை 6.00 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரையில் 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126-ன் கீழ், பின்வரும் விதிமுறைகள் செயலில் இருக்கும்;(1) தேர்தல் தொடர்பான யாதொரு பொதுக் கூட்டத்தையோ ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது.(2) யாதொரு தேர்தல் விவகாரத்தையும்,…

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளை ஒட்டி அவரது படத்துக்கு இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வெற்றி பெற்ற பிறகு இன்று அதிமுக தலைமை அலுவகத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு, தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு விமரிசையாக கொண்டாடும் வகையில் அதிமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஓர்…

முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை பிரசாரம்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிரசாரத்தின் கடைசி நாளான நாளை (25ம் தேதி) பிரசாரம் மேற்கொள்கிறார். நாளை காலை 9 மணிக்கு பிரசாரத்தை துவக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், சம்பத் நகரில் பொதுமக்களிடையே வேனில் நின்றவாறு பேசுகிறார். பின்னர் பெரிய…

77 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் கால தாமதத்தை தடுக்க 2 அறைகளில் கவுன்டிங்: கலெக்டர் தகவல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்து சித்தோடு ஐஆர்டிடி பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்பட உள்ளது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை மையத்தினை தேர்தல் பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் மற்றும் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பின் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நிருபர்களிடம் கூறுகையில், ‘77 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் கால தாமதத்தை தடுக்கும் வகையில் 2 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தரைதளத்தில் உள்ள அறையில் 10 மேஜைகளும், மேல்…

பொதுக்குழு தொடர்பான வழக்கில் மேல்முறையீடு செய்ய மாட்டோம்: ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் தகவல்

சென்னை: பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டோம் என ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் திருமாறன் தெரிவித்துள்ளார். சென்னை ஐகோர்ட்டில் நடக்கும் சிவில் வழக்குகளை விரைவாக முடிக்க உச்சநீதிமன்றம் செல்வோம் என்றும் அவர் கூறினார். தீர்மானங்கள் செல்லுமா என்பதை முடிவு செய்ய வேண்டியது சிவில் நீதிமன்றம் தான் என ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். Source link

அனைவரும் ஒன்றிணைவோம்; வென்று காட்டுவோம் என ஜெயலலிதா பிறந்தநாளில் உறுதி ஏற்போம்: வி.கே.சசிகலா அறிக்கை!

சென்னை: அம்மா பிறந்த இந்நன்னாளில், ஏழை எளிய சாமானிய மக்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்து ‘அம்மாவின்’ பிறந்தநாளை சிறப்புடன் கொண்டாடுவோம் என வி.கே.சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; ‘மக்களால் நான் மக்களுக்காகவே நான்’ என்று தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்துக் காட்டிய ஜெயலலிதாவின் 75ம் ஆண்டு பிறந்தநாளினை கொண்டாடும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.’வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடிமக்களின் மனதில் நிற்பவர் யார்?’ என்ற நம்…

ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் நேற்று நடந்த மோதல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 2 பேர் கைது

ஈரோடு: ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் நேற்று நடந்த மோதல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கற்கள் வீசி தாக்குதல் நடத்தியதாக கோவையைச் சேர்ந்த கணேஷ் பாபு மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த விஜய் கைது செய்யப்பட்டனர்.ஈரோடு கிழக்கு தொகுதியில் உட்பட்ட வீரப்பன்சத்திரம் பகுதியில் நேற்று மாலை ஈரோடு சீமான் பிரசாரம் செய்து வந்தார். 16ம் நம்பர் சாலையில் தெப்பக்குளம் வீதியில் சீமானின் பிரசார வாகனம் சென்றபோது, திமுக வேட்பாளருக்கு ஆதரவாக திமுக…

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட முடிவு: திமுக மாணவரணி கூட்டத்தில் தீர்மானம்

ஈரோடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாளாகவும், தமிழர்கள் ஏற்றம் பெற்ற நாளாகவும் கொண்டாட திமுக மாணவரணி முடிவு செய்துள்ளது. திமுக மாணவரணி மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாணவரணி செயலாளர் எழிலரசன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். மாநில தலைவர் ராஜீவ்காந்தி, இணை செயலாளர்கள்  ஜெரால்டு, மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 70வது பிறந்த நாளான மார்ச் 1ம்…

1 17 18 19 20 21 161