ஐபிஎல் ஏலம் போன்று நிர்வாகிகளை வாங்கிய எடப்பாடி: அதிமுக பொதுக்குழு குறித்து டிடிவி தினகரன் கடும் விமர்சனம்..!
சென்னை: அதிமுகவை கைப்பற்ற ஐபிஎல் ஏலம் போன்று பல கோடி ரூபாயை கொட்டி நிர்வாகிகளை வாங்கிய போதிலும் நீதிமன்ற உத்தரவால் எடப்பாடி பழனிசாமி நினைத்தது நடக்காமல் போய்விட்டதாக அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட அமமுக செயல்வீரர்கள் கூட்டம் அயப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய டிடிவி தினகரன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது சமீபத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு அதிமுகவை கைப்பற்ற எடப்பாடி மேற்கொண்ட யுத்திகளை கடுமையாக விமர்சித்தார். அதிமுக…









