Browsing: அரசியல்

வெலிங்டன் கன்டோன்மெண்ட் தேர்தலில் 7 வார்டுகளையும் கைப்பற்ற திமுக தீவிரம்

*ஓபிஎஸ் அணி குழப்பம்-பாஜவுடன் கூட்டணியை தொடருமா? அதிமுககுன்னூர் :  குன்னூர், வெலிங்டன் கன்டோன்மெண்ட் தேர்தலில் 7 வார்டுகளையும் கைப்பற்ற திமுக தீவிரம் காட்டி வருகிறது. முன்னாள் துணைத்தலைவர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர். இதனால் இந்த தேர்தலில் நிற்பது குறித்து குழப்பம் ஏற்பட்டுள்ளது.இந்தியா முழுவதும் ஒன்றிய அரசின் பாதுகாப்புத்துறை கட்டுபாட்டில் சுமார் 64  கன்டோன்மெண்ட் பகுதியில் உள்ளன. இவை அனைத்தும் ராணுவத்தின் மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது.இதில் 5 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி மக்கள் பிரதிநிதிகள் கொண்டு வார்டு‌…

வரும் 2024 தேர்தலில் அமேதி தொகுதியில் சமாஜ்வாடி போட்டி: அகிலேஷ் யாதவ் டிவிட்

லக்னோ: வழக்கமாக காங்கிரசுக்காக விட்டு கொடுக்கப்படும் அமேதி தொகுதியில் வரும் 2024 மக்களவை தேர்தலில் சமாஜ்வாடி கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார். சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமேதி சென்றிருந்தார். பின்னர் அவர் தனது டிவிட்டரில், “அமேதி ஏழை பெண்களின் நிலையைக் கண்டு பரிதாபமடைந்தேன். முக்கிய தலைவர்கள் போட்டியிட்டு வெற்றி அல்லது தோல்வி அடைந்த இத்தொகுதியில் நிலைமை இப்படி இருக்கிறது என்றால் மாநிலம் முழுவதும் சொல்ல வேண்டுமா?’’…

சொல்லிட்டாங்க…

* மருத்துவத் துறையில் வெளிநாடுகளை சார்ந்திருப்பதை இந்தியா குறைத்து வருகிறது. பிரதமர் மோடி* பாஜ சித்தாந்தத்தின் மையமே கோழைத்தனம்தான். இது பாஜவுக்கும், ஆர்எஸ்எஸ்சுக்கும் இயற்கையாகவே அமைந்த ஒன்று. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி* ராகுல் காந்தி தனது தோல்விகளை மறைப்பதற்கு, இந்தியாவை வெளிநாட்டில் காட்டிக் கொடுத்து வருகிறார். ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர்* அடுத்த முறை அமேதி பெரிய தலைவர்களை தேர்ந்தெடுக்காது. பெரிய மனது உடையவர்களையே தேர்வு செய்யும். சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்…

அதிமுக-பாஜக கூட்டணி உடைகிறதா?.. எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணாமலை ஆதரவாளர் கடும் கண்டனம்..!

சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி அடுத்தடுத்து நிர்வாகிகள் வெளியேறுவதால் அக்கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அண்ணாமலை மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து, பாஜக ஐ.டி. விங் தலைவராக இருந்த நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து நேற்று விலகினார். எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த அவர், அண்ணாமலை சொந்தக் கட்சியினரையே வேவு பார்ப்பதாக குற்றம்சாட்டினார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது கட்சி நிர்வாகிகளையே உளவு பார்த்து ஆனந்தமடைகிறார். பாஜக தலைமையகமான கமலாலயத்தில்…

ஈழத்தமிழர் நலனுக்காக வாழ்நாளையே அர்ப்பணித்தவர் வைகோ: தி.மு.இராசேந்திரன் அறிக்கை.!

சென்னை: ஈழத்தமிழர் நலனுக்காக வாழ்நாளையே அர்ப்பணித்தவர் தலைவர் வைகோ என மதிமுக துணைப்பொதுச்செயலாளர் தி.மு.இராசேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சத்தியம்  தொலைக்காட்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அண்ணன் திருமாவளவன் அவர்கள் அளித்த நேர்காணல் இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் பேசு பொருளாக ஆகி இருக்கின்றது. தலைவர் வைகோ அவர்களின் நெஞ்சில் நிறைந்த தம்பியாக எந்நாளும் திகழும் திருமா இந்த நேர்காணலில் ஈழப்பிரச்சினை குறித்து தெரிவித்திருக்கும் கருத்துகள் மிகுந்த மன வேதனையையும் கொந்தளிப்பையும்…

பொய்மையின் மொத்த உருவம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்: வைத்திலிங்கம் பேச்சு

சென்னை: பொய்மையின் மொத்த உருவம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். இன்னமும் கட்சியின் வளர்ச்சிக்காக, கட்சி ஒற்றுமைக்காக ஓயாது உழைத்துக் கொண்டிருக்கிறார் பன்னீர் என அவர் தெரிவித்தார். Source link

ஈரோடு கிழக்கு படுதோல்வி குறித்து விவாதிக்க 9ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: எடப்பாடி தலைமையில் நடக்கிறது

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வி குறித்து விவாதிக்க அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 9ம் தேதி சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2ம் தேதி எண்ணப்பட்டது. இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தென்னரசு வெறும் 43,923 வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்தார். திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1,10,156 வாக்குகள் பெற்று அபார…

சொல்லிட்டாங்க…

* விவசாயிகளின் வாழ்வில் மாற்றங்களைக் கொண்டு வரும் முயற்சிகளில் ஒன்று நானோ யூரியா. இது விவசாயிகளின் வாழ்வை எளிதாக்கும். – பிரதமர் நரேந்திர மோடி* வடஇந்திய தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் தமிழ்நாடு அரசு உறுதியுடன் இருக்கிறது.- தமிழ்நாடு ஆளுநர் ரவி* வெளிமாநில தொழிலாளர்கள் மிக குறைவான சம்பளத்துக்கு வேலை செய்கிறார்கள். அவர்களை கால்நடைகளைப் போல பட்டியில் அடைத்து வைக்கிறார்கள். – விசிக தலைவர் திருமாவளவன்* இன்சாப் என்ற கபில் சிபலின் முயற்சி முக்கியமானது. அநீதிக்கு எதிராக நாம்…

தொடர் தோல்விகளை சந்திக்கும் எடப்பாடி தவிடுபொடியான கொங்கு கோட்டை: ஒற்றை தலைமை கோஷத்துக்கு முடிவு கட்ட தலைவர்கள் போர்க்கொடி

எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட கனவை நினைவாக்குவோம்’ என்ற கோஷத்தை சொல்லாத அதிமுக தலைவர்களே இல்லை. ஆனால், அவர்களின் செயல்பாடு பிரதமர் மோடி, அமித்ஷா கண்ட கனவை நினைவாக்குவோம் என்ற ரீதியில்தான் உள்ளதாக அதிமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் வெளிப்படையாக பேசி கொண்டிருக்கின்றனர். ‘எப்படி இருந்த நான்… இப்படி ஆயிட்டேன்…’ – இதுதான் அதிமுகவின் இன்றைய நிலை. அதிமுக என்ற ஏணிதான் பாஜவை கொஞ்சம் கொஞ்சமாக மேலே கொண்டு வந்து கொண்டிருக்கிறது என்பதுதான் நிதர்சன உண்மை. அதே நேரத்தில்…

அதிமுக ஆட்சியில் நடந்த நிலக்கரி முறைகேடு குறித்து வழக்கு தொடர அனுமதி கிடைத்துள்ளது: ஆர்.எஸ்.பாரதி பேட்டி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டி:இந்தியாவுக்கு வழிகாட்ட கூடிய மாநிலமாக தமிழகம் உள்ளது. 1962ம் ஆண்டு அண்ணா, திராவிட நாடு கொள்கையை ஒத்தி வைக்கிறேன் என்று கூறிய பிறகு, திமுகவை அகில இந்திய அளவில் திமுக தலைவர் கருணாநிதி கொண்டு சென்றார். இந்தியாவுக்கே வழிகாட்ட கூடிய மாநிலமாகவும், குடியரசு தலைவர் போன்ற முக்கிய பொறுப்புகளை நிர்ணயிக்கும் மாநிலமாகவும் தமிழகம் இருந்தது. இதெல்லாம் அண்ணாமலைக்கு தெரியாது. அண்ணாமலை முதலில் தமிழக அரசியல்…

1 12 13 14 15 16 161