Browsing: செய்திகள்

போக்குவரத்து ஊழியர்களுக்கு அரசு சார்பாக முதற்கட்டமாக 5% ஊதிய உயர்வு அளிக்கப்படும்: அமைச்சர் சிவசங்கர் பேட்டி

சென்னை: போக்குவரத்து ஊழியர்களுக்கு அரசு சார்பாக முதற்கட்டமாக 5 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், தொழிற்சங்கங்கள் முன்வைத்த பெரும்பாலான கோரிக்கைகளை அரசு ஏற்றுள்ளது. 8 சதவீதம் ஊதிய உயர்வு வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள், அரசு 5 சதவீதம் அளிக்க முன்வந்துள்ளது. மேலும் சில கோரிக்கைகளை முதல்வரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். Source link

போலீஸ் டார்ச்சரால் முதியவர் தற்கொலை?! – நாம் தமிழர் கட்சியினர் புகார் | “Elderly man commits suicide because police torture” – says naam Tamil Party

இந்நிலையில் கடந்த சில நாள்களுக்குமுன் ஜெயசீலனை பிடிப்பதற்காக சென்ற குத்தாலம் காவல் ஆய்வாளர், ஜெயசீலன் எங்கே என்று கேட்டு தந்தை அர்ஜுனனை தகாத வார்த்தையால் பேசி கையை பிடித்து இழுத்து அவமரியாதை செய்ததாகவும், இதனால் மனஉளச்சலில் இருந்த ஜெயசீலனின் தந்தை அர்ஜுணன் பூச்சிமருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.நாம் தமிழர் கட்சி குற்றச்சாட்டு பின்னர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அர்ஜூனன், பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரின் உடல் பிரேத…

இலங்கை நெருக்கடி: ஒரு வாரத்தில் புதிய அரசாங்கம்; நாடாளுமன்றத்திற்கு அதிகாரம்: கோட்டாபய ராஜபக்ஷ

7 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஒரு வார காலத்திற்குள் புதிய அரசாங்கத்தை அமைத்து, அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மீள அமல்படுத்த தான் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இலங்கையில் விலைவாசி உயர்வு, பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார வீழ்ச்சியால் மக்கள் வீதிக்கு வந்துள்ளனர். அவர்கள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தினர் ஆட்சி அதிகாரத்தை விட்டு வெளியேற வேண்டும் எனக்கூறி காலி முகத்திடலில் ஒரு வாரத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.…

உக்ரைனுடனான போருக்கு ரஷ்யர்கள் எதிர்ப்பு. 48 ரஷ்ய நகரங்களில் போராடியவர்கள் மீது தடியடி

உக்ரைனுடன் உடனான போருக்கு ரஷ்யாவுக்கு உள்ளேயே மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்கள் நாட்டு அரசு போர் தொடுப்பதை கண்டித்து ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர். இதில் சுமார் 5 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ராணுவ பலம் குறைந்த உக்ரைன் இந்த எதிர்ப்பை சமாளித்து, ரஷ்ய படைகள் முன்னேறுவதை தடுத்து நிறுத்த தொடங்கியுள்ளது. இதற்கிடையே இரு நாடுகளுக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக பெலாரஸ் அரசு…

நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம்

நெய்வேலி: என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் வழங்கிய உள்ளூர் நபர்களுக்கு அந்நிறுவன வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். Source link

சந்தேகத்தால் மனைவியைக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை! – நீதிமன்றம் தீர்ப்பு | wife murdered case life conviction to husband in Chennai

சென்னை எம்.கே.பி.நகர் 17-வது மேற்கு குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சார்லஸ் ராஜ்குமார். இவரின் மனைவி ரமணி. இவர் கடந்த 21.7.2020-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான புகாரில் எம்.கே.பி நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, ரமணியின் கணவர் சார்லஸ் ராஜ்குமாரைக் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ரமணியின் மீதான சந்தேகத்தால் அவரைக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சார்லஸ் ராஜ்குமார் மீது கொலை உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு…

இலங்கையில் ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் வகையில் வன்முறைக்கு தூண்டல்: முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க

8 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பிரதமரின் அதிகாரப்பூர்வ குடியிருப்புக்கு வெளியே குவிக்கப்பட்ட பாதுகாப்புப் படையினர்.(இன்றைய (மே 11) இந்திய மற்றும் இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்)ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் வகையில் வன்முறையைத் தூண்டுவதற்கு சமூக விரோதிகள் பயன்படுத்தப்படலாம் என்று இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளதாக, ‘தினக்குரல்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.போராட்டம் நடத்தும் பொதுமக்கள் வன்முறைக்கும், ராணுவ ஆட்சிக்கும் இடமளிக்காத வகையில் நடந்துகொள்ள…

தமிழக அரசின் இலவச பயிற்சி மையத்தில் படித்த மாணவர்கள் யுபிஎஸ்சி முதன்மை தேர்வில் தேர்ச்சி

தமிழக அரசால் நடத்தப்படும் இலவச பயிற்சி மையத்தில்  படித்த 12 மாணவர்கள் யுபிஎஸ்சி சிவில் சர்விஸ் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வரும், அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையத்தில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், அகில இந்திய குடிமைப் பணிகளில் அடங்கிய முதல்நிலை, முதன்மைத் தேர்வுகளை எதிர்கொள்ளும் தேர்வர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள, சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள, ஏழை, எளிய தேர்வர்களுக்கு பயனளிக்கும் வகையில், இப்பயிற்சி மையம் …

இலங்கையில் வன்முறை: 12ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

இலங்கை: இலங்கையில் வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில் மே 12ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்ததது காவல்துறை. அதிபர் கோட்டாபய ராஜபக்சே பதிவு விலகி வலியுறுத்தி போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது Source link

சென்னை: இன்ஸ்ட்ராகிராம் மூலம் நட்பு; போக்சோவில் கைதான இளைஞர்! – என்ன நடந்தது? | police arrested a youth who sexually abused a girl in chennai teynampet

சென்னை தி.நகர் காவல் மாவட்டத்தில் வசிக்கும் 13 -வயது சிறுமியை கடந்த 6-ம் தேதி முதல் காணவில்லை என அவரின் பெற்றோர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியை பம்மல் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அழைத்துச் சென்றது தெரியவந்தது. அதனால் இருவரையும் போலீஸார் தேடிவந்தனர். இந்த நிலையில், இளைஞரின் வீட்டில் சிறுமி தங்கியிருப்பதை போலீஸார் கண்டறிந்தனர். பின்னர் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து…

1 448 449 450 451 452 456