சிஜேபி ஓர் அரசியல் கட்சியாக மாறுமா? அடுத்தக்கட்டம் பற்றிய அலசல்

Share

இந்தியா, சிஜேபி, மோதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காக்ரோச் ஜனதா கட்சியின் கோரிக்கைகளை ஆதரித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன (கோப்புப் படம்).
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

கடந்த சில வாரங்களில், இந்தியா ஒரு போராட்ட இயக்கத்தைக் கண்டது. இதில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து வீதிகளில் இறங்கினர். அந்த வீதிகளில் மாணவர்கள் மட்டுமல்ல, அவர்களுடன் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

படிப்படியாக, சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் இந்த இயக்கத்தில் இணைந்தனர். இதன் முகமாக காக்ரோஜ் ஜனதா கட்சி (சிஜேபி) மாறியது.

சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக்கும் இந்த சிஜேபி இயக்கத்தில் இணைந்தார். அவர்களின் கோரிக்கைகள் தெளிவாக இருந்தன. தேர்வு வினாத்தாள் கசிவுகள் தடுக்கப்பட வேண்டும், வினாத்தாள் கசிவில் ஈடுபட்ட குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும், தேர்வு முறை மேம்படுத்தப்பட வேண்டும், மேலும் அதற்கான பொறுப்புகள் நிர்ணயிக்கப்பட வேண்டும் ஆகியன அவர்களது கோரிக்கைகள்.

போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அரசு போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.

தேர்வு முறையில் சீர்திருத்தங்கள் செய்யப்படும் என்று அரசு உறுதியளித்தது. வினாத்தாள் கசிவைத் தடுப்பதற்காக நாடாளுமன்றமும் புதிய சட்ட மசோதாவை நிறைவேற்றியது. இது மிகவும் கடுமையான சட்டமாக இருக்கும் என்று அரசு கூறுகிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com