குடியரசு தின விழா புறக்கணிப்பு; “தன்னிச்சையாகச் செயல்படுகிறார் ஆணையர்!” – சாடும் நகராட்சித் தலைவர் | Municipal President boycotts Republic Day celebrations in Erode
ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி நகராட்சித் தலைவராக ஜனார்த்தனனும், துணைத் தலைவராக பி.ஏ.சிதம்பரமும் பதவி வகித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்றைய தினம் புளியம்பட்டி நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்காமல் நகராட்சித் தலைவர் ஜனார்தனன், துணைத் தலைவர் சிதம்பரம் உள்ளிட்ட தி.மு.க., காங்கிரஸ் கவுன்சிலர்கள் புறக்கணித்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பேசுபொருளானது. இந்தப் புறக்கணிப்பின் பின்னணி குறித்து நகராட்சித் தலைவர் ஜனார்த்தனனிடம் விசாரித்தோம். நம்மிடம் பேசிய அவர், “குடியரசு தின…









